welcome

நண்பர்களுக்கு ஓர் இனிய வேண்டுகோள்! எனது ஒவ்வொரு படைப்பையும் படித்த பின் உங்களது கருத்துகளை பதிவு செய்ய வேண்டுகிறேன்.

Friday, November 26, 2010

அய்யகோ தேர்தல்

அய்யகோ தேர்தல்

தேர்தல் தேர்தல்!
தேசமெங்கும் தேர்தல்!
வண்ணக்கொடிகள் பவனி வரும்
வழக்கமாய் வரும் தேர்தல்!

வர்ண ஜால மேடையில்
வகைவகையாய் பேச்சுக்கள்!
வாரியிறைக்கும் வாக்குறிதிகள் - அதில்

வாய் இனிக்கும் வாக்காளர்கள்!

ஆண்டு ஐந்து அனால்
ஆடி வரும் தேர்தல்!
அடிப்பட்டு மிதிப்பட்டு
அல்லல் பட்டு

அடிமட்ட தொண்டர்கள்
மிதிப் பட்டு
கள்ள ஒட்டு நல்ல ஒட்டு

கலந்துப் போட்டு.

களத்தில் நிற்கும் வேட்பாளரை
தேர்ந் தெடுத்து
நாட்டுக்கு நலன் செய்ய
நாம் அனுப்பும் தேர்தல்!

ஏமாற்றலாம் என்றெண்ணி
வந்தவர்கள் நினைத்திட்டால்!
ஏமாறியேப் போவார்கள்
அடுத்த தேர்தல் வந்திட்டால்!

சொல்லுவதையெல்லாம் சொல்லிவிட்டோம்
தொகுதி மக்கள் நாங்களும்!
செய்வதையெல்லாம் செய்யுங்கள்
தேர்வுப் பெற்ற நீங்களும்!

கவிஞர்
கவி  தென்றல்
ஆவடி, தமிழ் நாடு.

No comments:

Post a Comment