welcome

நண்பர்களுக்கு ஓர் இனிய வேண்டுகோள்! எனது ஒவ்வொரு படைப்பையும் படித்த பின் உங்களது கருத்துகளை பதிவு செய்ய வேண்டுகிறேன்.

Sunday, November 21, 2010

அம்மா

 அம்மா
                            
 அம்மா என்ற மூன்றெழுத்தில்
அமைவது தான் உன் தலைஎழுத்து!


பத்து மாதம் வயிற்றில் வைத்து
பருவம் வரை உனை பாதுகாத்து  
இல்லறம் ஒன்றை அமைத்து கொடுத்து
நல்லறம்  காண  செய்வார்  அம்மா !


தெய்வத்திலும்  சிறந்தவள்  அம்மாதான் -நம்
எதிரில்  நடமாடும்  தெய்வம்தான் !
தியாகத்தின்  எல்லை  அம்மாதான் -நாம்
தினசரி  தரிசிக்கும்  தெய்வம்  தான் !


சுமைகளை  மனதினில்  மறைத்திடுவாள் !
சுகங்களை  நமக்கு  தந்திடுவாள் !
இமைப்போல்  நம்மை  காத்திடுவாள் !
இன்புற  செய்தே மகிழ்ந்திடுவாள் !


இரத்தத்தை  பாலாக்கி தந்திடுவாள் !
இரவு  பகலாய்  நம்மை  காத்திடுவாள் !
நம்  பசியை  போக்கி மகிழ்ந்திடுவாள் !
தம்  பசியை  அதிலே  மறந்திடுவாள் !

                                                                              கவிஞர்
                                                          கவி  தென்றல்
                                                           ஆவடி  தமிழ்நாடு

No comments:

Post a Comment