welcome

நண்பர்களுக்கு ஓர் இனிய வேண்டுகோள்! எனது ஒவ்வொரு படைப்பையும் படித்த பின் உங்களது கருத்துகளை பதிவு செய்ய வேண்டுகிறேன்.

Monday, November 22, 2010

ஏக்கம்

                  ஏக்கம்
       
        பிறந்தவுடன்
        கள்ளிப்பால்...
        பிழைத்து விட்டேன்
        நான்!
        தாயின் முலைப்பால்

        வளர்த்து விட்டது
        என்னை!
        பள்ளிக்குச் செல்ல
        பணமில்லை வீட்டில்!
        கூலி வேலைக்கு
        சென்றேன்
        குடும்பத்தைக் காக்க!  
        என் வயது பெண்கள்
        எல்லோருக்கும்
        திருமணம்!
        எனக்கு அந்நிலை
        எப்போது வருமோ?
                          

                        கவிஞர்
                          கவி தென்றல்
                          ஆவடி, தமிழ்நாடு.

       

No comments:

Post a Comment