welcome

நண்பர்களுக்கு ஓர் இனிய வேண்டுகோள்! எனது ஒவ்வொரு படைப்பையும் படித்த பின் உங்களது கருத்துகளை பதிவு செய்ய வேண்டுகிறேன்.

Thursday, November 25, 2010

ஹைக்கூ கவிதைகள்

  
குடை

தன்னை நனைத்து
உன்னை காக்கும்
தன்னலமற்றவன்.  






வேசிக்கு

கொலை!
கொள்ளை!
கற்பழிப்பு!
வேலையில்லா திண்டாட்ட   
வேசிக்கு பிறந்த
குழந்தைகள்.




ரேஷன் அரிசி

ரேஷன் கடையில்
வாங்கி வந்த கல்லில்
அரிசியைப் பொறிக்கினாள்  
அம்மா!




 
கத்தி

கத்தியைக் காட்டி
வழி மறித்தான்
திருடன்!
கத்தியே
கூட்டத்தை சேர்த்தாள்  
அவள்!



  
மனிதன்

பெண்ணே!
நீ...
பெற்றவருக்கு பயந்து
தீயிக்கு இரையானாய்!  
நான்...
மற்றவருக்கு பயந்து
மனிதனானேன்.



கவிஞர்
கவி  தென்றல்
ஆவடி, தமிழ் நாடு.
 

No comments:

Post a Comment