welcome

நண்பர்களுக்கு ஓர் இனிய வேண்டுகோள்! எனது ஒவ்வொரு படைப்பையும் படித்த பின் உங்களது கருத்துகளை பதிவு செய்ய வேண்டுகிறேன்.

Tuesday, April 26, 2011

மனிதனின் வாழ்க்கை




 இருபது வயதில் ...
     அழகிய மனைவி !
கைநிறைய சம்பளம் !
முப்பது வயதில் ...
     இரு குழந்தைகள் !
நாற்பது வயதில் ...
     நல்ல தொரு வீடு !
ஐம்பது வயதில் ...
     பிள்ளைகள் திருமணம் !
அறுபது வயதில் ...
எனக்கும் ,
என் மனைவிக்கும்
துணை
அனாதை விடுதி !

                                                

                                                 கவிஞர்

                        கவி  தென்றல்
                                      ஆவடி , தமிழ்நாடு

இந்த கவிதையைப் படித்து விட்டு போகிறவரே!
உங்கள் கருத்தைச் சொல்லிவிட்டு போகலாமே!.

Friday, April 15, 2011

தலைவனின் ஆணை!
 

 


















தோழா...

சிங்கமென புறப்படு!
வங்க கடல்
அலையென வா!
வீட்டை மற!
நாட்டை நினை!
நாளை நமதே!
சீற்றம் கொள்!
வெயில், மழை பாராதே!
வெற்றிக்காக உழை!
உற்சாகம் கொள்!
உதிரம் சிந்து!


உன் உயிர் ஈந்து
என் உயிர் காக்க
விரைந்து வா!
வெற்றிக் கனியை பறித்து
பாசமிகு தலைவனுக்கு
பரிசளிக்க...


குளிர்சாதன அறையிலிருந்து
குரல் கொடுத்தார்
கட்சித் தலைவர்!

                                                       கவிஞர்
                                                கவி  தென்றல்
                                            ஆவடி, தமிழ் நாடு.


இந்த கவிதையைப் படித்து விட்டு போகிறவரே!
உங்கள் கருத்தைச் சொல்லிவிட்டு போகலாமே!

விண்ணில்  உன்  ஜீவன்


 












உலகைப் படைத்த நமது ஆண்டவர்
     உன்னை அழைக்கிறார் !
உரிமையோடு அவரிடத்தில்
     ஒன்று சேர்ந்திடு !

அன்பு  கொண்ட ஆண்டவரிடத்தில் உன்
     தேவையை  சொல்லி விடு !
புண்பட்ட உந்தன் வாழ்வை
     பொன் போல் மாற்றுவார் !

எல்லையில்லா தொல்லைக் கொண்ட
     உன் ஆத்துமாவை
எண்ணிலடங்கா அற்புதம் செய்து
     பரிசுத்தம் ஆக்குவார் !

மண்ணில் முடங்கும் உடலைக் குறித்து
     கவலைக் கொள்ளாதே !
விண்ணில் உலாவும் உனது ஜீவன்
     உன்னதம் அன்றோ !

                    
                     
                                                            கவிஞர்
                                                கவி  தென்றல்
                                                   ஆவடி , தமிழ்நாடு .


இந்த கவிதையைப் படித்து விட்டு போகிறவரே!
உங்கள் கருத்தைச் சொல்லிவிட்டு போகலாமே!

Friday, April 8, 2011

ஈடில்லாப் புகழை இது பெறும்
 













னைவரும் போற்றும் அன்புக்கரம் !
ர்வத்துடன் படிக்கும் இணைக்கரம் !
ணையில்லா சிறப்புடைய இந்தகரம் !
டில்லாப் புகழை இது பெறும் .
ள்ளுக்குள் உலாவரும் உறவுக்கரம்!
ரெல்லாம் புகழ்கின்ற நாள் வரும் !
ண்ணமெல்லாம் எதிரொலிக்கும் எழுச்சிக்கரம்!
ற்றத்தாழ்வை எதிர்த்து நிற்கும் இணைக்கரம்!
யத்தை நீக்கி விடும் அறிவுக்கரம் !
ற்றுமையை வளர்த்துவிடும் உயர்ந்தகரம் !
ங்கி வளர்ந்திருக்கும் ஆலமரம் !
ஓளவையின் பாடல் நல் தமிழுக்கு உரம் !
அஃதே போல் நமக்கெல்லாம் இது தரும்.!

                                                                                   கவிஞர்
                                                                     கவி  தென்றல்
                                                                          ஆவடி, தமிழ் நாடு.


இந்த கவிதையைப் படித்து விட்டு போகிறவரே!
உங்கள் கருத்தைச் சொல்லிவிட்டு போகலாமே!

அடைந்து விட்டோம் ஐ .எஸ் .ஒ


அயராது உழைத்திட்டோம் -நாம்
ஐ .எஸ் .ஒவை  .பெற்றிட்டோம் .
அயல் நாட்டு சந்தைக்குள் -நாம்
அல்லலின்றி நுழைந்திட்டோம் .

பன்னாட்டு சான்றிதழ் -நம்
பணியாளரது கடமை .
பங்கம் வராமல்  காப்பது-நம்
அனைவரது கடமை .

ஒன்றுக்கூடி உழைத்திடுவோம் .
உற்பத்தியை பெருக்கிடுவோம் .
ஒரேக் குழுவாக செயல்படுவோம் .
உலகளவில்  சிறந்திடுவோம் .

உற்பத்தி பொருளின் குறைகளை-நாம்
உடனுக்குடன் நீக்கிடுவோம்  !
வாடிக்கையாளர் அதிருப்தியை -நாம்
வராமல் இனி !தடுத்திடுவோம்

                                                         கவிஞர்
                                           கவி  தென்றல்        

                                               ஆவடி , தமிழ்நாடு .

இந்த கவிதையைப் படித்து விட்டு போகிறவரே!
உங்கள் கருத்தைச் சொல்லிவிட்டு போகலாமே!

Tuesday, April 5, 2011

தலைவனின் ஏக்கம்










சந்திர பிறை நெற்றியில்
சதிராடும் கருங் கூந்தலும்,
சுந்தர வதனத்தில்
சுவை கூட்டிடும் புன்னகையும் - காணும் போது
மந்திரத்தில் கட்டுண்டு - நான்
அந்தரத்தில் மிதக்கின்றேன்!
நிரந்தரமாய் நான் வழ
நின் துணையும் வேண்டுமே!
என்று வருமோ அந்நிலை!
ஏங்குகிறேன் என் அன்பே!


                                                     கவிஞர்
                                                கவி  தென்றல்
                                             ஆவடி, தமிழ் நாடு.



இந்த கவிதையைப் படித்து விட்டு போகிறவரே!
உங்கள் கருத்தைச் சொல்லிவிட்டு போகலாமே!
       உழவன்
















ஒரு வேளை உணவிற்கு
ஏங்கும்...
ஒட்டிய வயிறு !
உழைத்து உழைத்து
ஒல்லியான உருவம் !
பகலெல்லாம் பாடுபட்டு
கருத்த தேகம் !
அடுத்தவருக்கு அடிமைப்பட்டு
அரையில் கோவணம் !
வயலின் வறட்சிக் கண்டு
வளைந்த முதுகு !
இதுதான் இன்றைய
உழவனின் உருவம் !


                                              கவிஞர்
                                       கவி  தென்றல்
                                   ஆவடி, தமிழ் நாடு.



இந்த கவிதையைப் படித்து விட்டு போகிறவரே!
உங்கள் கருத்தைச் சொல்லிவிட்டு போகலாமே!



      யோகி















பாசமென்னும் பானைதனை
பந்தலிலே அமைத்திட்டான்!
நேசமெனும் குளிர் நீரினை
அப்பானைதனில்  நிரப்பிட்டான்!

மோசம் செய்ய வருவோர்க்கு - நல
மோர்தனை அளித்திட்டான்!
ஆசையுடன் வருவோர்க்கு - நல
ஆசிதனை வழங்கிட்டான்!

                                                               கவிஞர்
                                                  கவி  தென்றல்
                                                       ஆவடி, தமிழ் நாடு.






கவிதையைப் படித்து விட்டு போகிறவரே!
உங்கள் கருத்தைச் சொல்லிவிட்டு போகலாமே!
   ஊனம்

 















பெண்ணே ...
நீ என்னைப் பார்த்தபோது
நான் குருடனானேன் !
நீ பேசியபோது ...
நான் ஊமையானேன் !
நீ சிரித்தபோது ...
நான் சிலையானேன் !
நீ என்னை விட்டு பிரிந்த போது...
நான் ஊனம் ஆனேன் !

                                                    கவிஞர்
                                      கவி  தென்றல்
                                          ஆவடி , தமிழ்நாடு .

இந்த கவிதையைப் படித்து விட்டு போகிறவரே!
உங்கள் கருத்தைச் சொல்லிவிட்டு போகலாமே!

Friday, April 1, 2011




அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு!
 


 











சர்க்கரை நோய்  உடலில் வந்து விட்டால்
சாகும் வரையில் உன்னை விட்டு அகலாது !
மாத்திரை மருந்து நீ உட்கொண்டாலும்
மரணம் வரை உன்னை விட்டு விலகாது !

கோட்டைக் கதவை திறந்து வைத்தால்
கோழை மன்னன் கூட படையெடுப்பான் !
சக்கரை நோய்க்கு  நாம் இடம் கொடுத்தால்
சகல நோயும் உனக்குள் வந்து விடும் !

சிறுக் காயம் உடலில் பட்டாலும்
சித்திரவதையை நீ அனுபவிப்பாய்
தூக்கம் உனக்கு  சரியாய் வராது
சுறுசுறுப்பும் உடலில் இருக்காது !

வாலிபமான உன் உடல் வாகு
வயோதியனைப்  போல ஆகிவிடும் !
ஆசைபட்ட எந்த உணவையும்
அளவுக்கு மேல் தின்ன முடியாது !

கல்லீரல்  , மண்ணீரல்  , கிட்னிஎல்லாம்
கலகலத்து உழைக்க மறுத்து விடும் !
ரத்தத்தில் சர்க்கரை கலந்து விட்டால்
இதயம் எந்த நேரத்திலும் நின்று விடும் !

உண்ணும் உணவில் கலப்படம் !
தின்னும் இடத்தில் கலப்படம் !
விளையும் இடத்தில் கலப்படம் !
விளைந்த உணவு பொருளில் கலப்படம் !

அதிகாலையில் சாலையிலே
அணி வகுக்கும் நம்மவர்கள் ,
சிறுவர் முதல் பெரியவர் வரை
சிரம பட்டு நடக்கின்றனர் , ஓடுகின்றனர் !

பரம்பரையாக வரும் நோயுமல்ல !
பாதியில் வரும் நோயுமல்ல !
கலப்படமான உணவுகளாலே
கலந்து வரும் நோயிது !

உண்ணும் உணவை தேர்ந்தெடுத்து
உண்ணும் பழக்கம் வர வேண்டும் !
உடற் பயிற்சியை செய்திடணும் !
உயர்ந்த வாழ்வினை பெற்றிடணும் !

                                                      
                                                        கவிஞர்
                              கவி தென்றல்
                                               ஆவடி , தமிழ்நாடு .


இந்த கவிதையைப் படித்து விட்டு போகிறவரே!
உங்கள் கருத்தைச் சொல்லிவிட்டு போகலாமே!