welcome

நண்பர்களுக்கு ஓர் இனிய வேண்டுகோள்! எனது ஒவ்வொரு படைப்பையும் படித்த பின் உங்களது கருத்துகளை பதிவு செய்ய வேண்டுகிறேன்.

Sunday, November 21, 2010

காதலர்களின் நம்பிக்கை

                              காதலர்களின்  நம்பிக்கை
                           
ஆலமரத்தின்  மேலிருந்து
சின்னக்குருவிகள்  இரண்டு
ஆடிப்பாடி  மகிழுதம்மா
நம்  காதலையும்  கண்டு !

கூரை  வீட்டின்  மேலிருந்து
கோழி  சேவல்  இரண்டும்
கூடி  கூடி  மகிழுதம்மா
நம்  காதலையும்  கண்டு !

லைலா  மஜுனு  காதல்  அல்ல
இந்த  நாட்டுப்புற  காதல் !
வயல்  வரப்பில்  வளர்ந்துவரும்
வளமை மிக்க  காதல் !                  

எதிர்ப்பு  எத்தனை  வந்தாலும்
எதிர்த்து  நிற்ப்போம்  நாங்கள் !
எத்தனை  பிறவிகள்  எடுத்தாலும்
எங்களைப்  பிரிக்க  முடியாது  நீங்கள் !

தம்பதிகளாய்  வாழ  எங்களை
வாழ்த்தி  விடுங்கள்  நீங்கள் !
சந்தோஷமாய்  நாங்கள்  வாழ
சற்று  வழி  விடுங்கள்  நீங்கள் !

                                                                     கவிஞர்
                                                        
கவி தென்றல்
                                                           ஆவடி,   தமிழ்நாடு .
 

No comments:

Post a Comment