welcome

நண்பர்களுக்கு ஓர் இனிய வேண்டுகோள்! எனது ஒவ்வொரு படைப்பையும் படித்த பின் உங்களது கருத்துகளை பதிவு செய்ய வேண்டுகிறேன்.

Thursday, November 25, 2010

விண் மீன்கள்

  விண் மீன்கள்


விண்ணவருக்கு ஒளி கொடுக்க
மின்னுகின்ற விண் மீன்களே
மண்ணில் வாழும் மாந்தர்க்கு
மனக்குறையை போக்கும் விண் மீன்களே!

உண்ண மறக்கும் குழந்தைகளுக்கு
உணவு ஊட்டும் தாய்மார்கள்
உன்னை நோக்கி கைக் காட்டி
உணவை ஊட்டி மகிழ்கின்றனர்!

வானநூல் அறிஞர்கள் யாவரும்,
வளம் வரும் உன்னைக் கண்டு,
காலம் நேரம் காற்று மழையை
கண்டிட உதவும் விண்மீன்களே!

தேவ மைந்தன் இயேசு கிறிஸ்து,
பாவ உலகில் பிறந்த அன்று
விண்ணில் தோன்றி யாவரையும்,
வியப்பில் ஆழ்த்திய விண்மீன்களே!



                                                             கவிஞர்
                                     கவி  தென்றல்
                                                     ஆவடி, தமிழ் நாடு.

No comments:

Post a Comment