welcome

நண்பர்களுக்கு ஓர் இனிய வேண்டுகோள்! எனது ஒவ்வொரு படைப்பையும் படித்த பின் உங்களது கருத்துகளை பதிவு செய்ய வேண்டுகிறேன்.

Sunday, November 21, 2010

தமிழ்நாடு

 தமிழ்நாடு

தென்நாடாம் பொன்நாடாம் நம்நாடு !      
செந்தமிழ் விளையாடும் தமிழ்நாடு!
பண்டைக் காலந்தொட்டு பண்போடு!
பாங்காக வளர்க்கப்பட்ட தமிழ்நாடு!


எத்தனையோ மொழியுண்டு நாம்நாட்டில்!
அத்தனைக்கும் வித்தான நாம் தமிழ்மொழி!
சத்தான சுகமுண்டு நம் மொழிக்கும்!
சொத்தாக போற்றிடுவோம் நம் எல்லோருக்கும்!

மூவேந்தர் ஆண்ட தமிழ்நாட்டில்,
முத்தாக காக்கப்பட்ட தமிழ் மொழியை!
தாய்போல காத்திடுவோம் நாம் மொழியை
தலை நிமிர்ந்து சொல்லிடுவோம் நாம் தமிழரென்று!

                                               
                                                        கவிஞர்
                                                கவி தென்றல்
                                                 ஆவடி, தமிழ்நாடு.

1 comment:

  1. நாம் பிறந்து வளர்ந்த நம் தமிழ்நாட்டை
    மிக அழகான கருத்துகளின் மூலம்
    உயர்த்தி நிறுத்தியதற்கு
    இந்த தமிழனின் வாழ்த்துக்கள் >

    ReplyDelete