welcome

நண்பர்களுக்கு ஓர் இனிய வேண்டுகோள்! எனது ஒவ்வொரு படைப்பையும் படித்த பின் உங்களது கருத்துகளை பதிவு செய்ய வேண்டுகிறேன்.

Monday, November 22, 2010

ஒன்றுபட்டால்... உண்டு வாழ்வு !

    ஒன்றுபட்டால்... உண்டு வாழ்வு !


ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு !
நம்மில்...
ஒற்றுமை நீங்கிடின் அனைவருக்கும் தாழ்வு !
பாரதியின் கவிதை இது!
நமக்கு
பயன் தரும் மருந்து இது !

ஒரு கை ஓசைத் தருமா ?
இரு கைகள் இணைந்தால் தானே
ஓசை வரும் !
பள்ளி யிலே...
படிக்க வில்லையா?
பசு சிங்கம் கதை !

ஒற்றுமையாய் வாழ்ந்த போது
சிங்கம் பயந்தது !
வேற்றுமையாய் வாழ்ந்த போது
சிங்கம் பாய்ந்தது !
புறா வேடன் கதை
நமக்கு...
புரிய வைக்கும்
ஒற்றுமையை!

வேடன் விரித்த வலையிலே
சிக்கிக் கொண்ட புறாக்கள்
தம் உயிரை காத்து கொண்டது
உயர் ஒற்றுமையால் வந்ததல்லவோ ?
ஒற்றுமையாய் வாழ்ந்திடுவோம் !
வளமாய் வாழ்ந்திடுவோம் !
                                  

                                            கவிஞர்
                                            கவி தென்றல்
                                            ஆவடி, தமிழ்நாடு .





No comments:

Post a Comment