welcome

நண்பர்களுக்கு ஓர் இனிய வேண்டுகோள்! எனது ஒவ்வொரு படைப்பையும் படித்த பின் உங்களது கருத்துகளை பதிவு செய்ய வேண்டுகிறேன்.

Friday, November 26, 2010

 கொலுவில் இருப்போரே 
                   நினைவில் இருத்துங்கள்...


வெற்றிப்பெற்ற   வேட்பாளர்கள்
வீற்றிருக்கும்     மத்தியில்!
தொகுதிதனை    நினைக்கணும்
தொண்டாற்றி     மகிழனும்.

வஞ்சமற்ற       மக்களை - தம்
நெஞ்சமதில்      வைக்கணும்!
கொஞ்சமுள்ள    குறைகளை
மிஞ்ச நிறைவு    செய்யனும்!

ஆண்டுக்          கொன்றாகிலும் - தொகுதியில்
அடியெடுத்து      வைக்கணும்!
வாட்டமுற்ற      ஏழைகளுக்கு பல
வசதிகளை        செய்யனும்!

வெற்றிப்பெற்ற     மமதையில்
வேறு நிலை       காட்டினால்?
அடுத்து வரும்     தேர்தலில்
அதற்கு பதில்      வந்திடும்!



                                                                        கவிஞர்
                                             கவி  தென்றல்
                                                                 ஆவடி, தமிழ் நாடு.

No comments:

Post a Comment