welcome

நண்பர்களுக்கு ஓர் இனிய வேண்டுகோள்! எனது ஒவ்வொரு படைப்பையும் படித்த பின் உங்களது கருத்துகளை பதிவு செய்ய வேண்டுகிறேன்.

Friday, November 26, 2010

அய்யகோ தேர்தல்

அய்யகோ தேர்தல்

தேர்தல் தேர்தல்!
தேசமெங்கும் தேர்தல்!
வண்ணக்கொடிகள் பவனி வரும்
வழக்கமாய் வரும் தேர்தல்!

வர்ண ஜால மேடையில்
வகைவகையாய் பேச்சுக்கள்!
வாரியிறைக்கும் வாக்குறிதிகள் - அதில்

வாய் இனிக்கும் வாக்காளர்கள்!

ஆண்டு ஐந்து அனால்
ஆடி வரும் தேர்தல்!
அடிப்பட்டு மிதிப்பட்டு
அல்லல் பட்டு

அடிமட்ட தொண்டர்கள்
மிதிப் பட்டு
கள்ள ஒட்டு நல்ல ஒட்டு

கலந்துப் போட்டு.

களத்தில் நிற்கும் வேட்பாளரை
தேர்ந் தெடுத்து
நாட்டுக்கு நலன் செய்ய
நாம் அனுப்பும் தேர்தல்!

ஏமாற்றலாம் என்றெண்ணி
வந்தவர்கள் நினைத்திட்டால்!
ஏமாறியேப் போவார்கள்
அடுத்த தேர்தல் வந்திட்டால்!

சொல்லுவதையெல்லாம் சொல்லிவிட்டோம்
தொகுதி மக்கள் நாங்களும்!
செய்வதையெல்லாம் செய்யுங்கள்
தேர்வுப் பெற்ற நீங்களும்!

கவிஞர்
கவி  தென்றல்
ஆவடி, தமிழ் நாடு.

சோகம்

சோகம்

மதவெறியும் இன வெறியும்
மலிந்துள்ள இந்நாட்டில்
என் போன்ற மழலைகளின்
எதிர்காலம் என்னவாகும்?

நிகழ் காலத்தில் எதிர்காலத்தை
எதிர்நோக்கும் இவளுக்கு
என்ன பதில் கூறுவது?
எல்லோரும் சிந்தியுங்கள்.

கவிஞர்
கவி  தென்றல்
ஆவடி, தமிழ் நாடு.

                        இடி, மின்னல்


வானில்
வெடி (இடி) சத்தமும்
தீப்பிழம்பும் (மின்னல்)
மேகங்களே...
உங்களிடமும்
தீவிரவாதிகளின்
ஊடுருவலா?

கவிஞர்
கவி  தென்றல்
ஆவடி, தமிழ் நாடு.
 சினிமா நடிகை


தாலி கட்டியவனுக்கு
      மனைவியும் அல்ல!
பெற்ற பிள்ளைக்கு
     தாயுமல்ல!
பெற்றவருக்கு
      பெண்ணுமல்ல!
வாங்கும் பணத்திற்கு
      உரிமையுள்ளவள்!


கவிஞர்
கவி  தென்றல்
ஆவடி, தமிழ் நாடு.

இலவச வேலைக்காரி

         இலவச வேலைக்காரி


சம்பளம் இல்லை!
மருத்துவம் இல்லை!
ஓய்வு இல்லை!
விடுமுறை இல்லை!
போனஸ் இல்லை!
முழு நேர வேலைக்காரியாக
என் மகன் வீட்டில்!


கவிஞர்
கவி  தென்றல்
ஆவடி, தமிழ் நாடு.

அன்றும் இன்றும்

அன்றும் இன்றும்


அன்று...
மகாராணியாக வாழ்ந்த
நான்!
இன்று... 
மகன் வீட்டில்  
சம்பளம் இல்லா
வேலைக்காரியாக!


கவிஞர்
கவி  தென்றல்
ஆவடி, தமிழ் நாடு.
 கொலுவில் இருப்போரே 
                   நினைவில் இருத்துங்கள்...


வெற்றிப்பெற்ற   வேட்பாளர்கள்
வீற்றிருக்கும்     மத்தியில்!
தொகுதிதனை    நினைக்கணும்
தொண்டாற்றி     மகிழனும்.

வஞ்சமற்ற       மக்களை - தம்
நெஞ்சமதில்      வைக்கணும்!
கொஞ்சமுள்ள    குறைகளை
மிஞ்ச நிறைவு    செய்யனும்!

ஆண்டுக்          கொன்றாகிலும் - தொகுதியில்
அடியெடுத்து      வைக்கணும்!
வாட்டமுற்ற      ஏழைகளுக்கு பல
வசதிகளை        செய்யனும்!

வெற்றிப்பெற்ற     மமதையில்
வேறு நிலை       காட்டினால்?
அடுத்து வரும்     தேர்தலில்
அதற்கு பதில்      வந்திடும்!



                                                                        கவிஞர்
                                             கவி  தென்றல்
                                                                 ஆவடி, தமிழ் நாடு.

Thursday, November 25, 2010

தேர்தல்

தேர்தல்


ஓட்டு வாங்கி ஏமாற்றும்
வேட்பாளர்கள்!
ஓட்டுப் போட்டு ஏமாறும்
வாக்காளர்கள்!


கவிஞர்
கவி  தென்றல்
ஆவடி, தமிழ் நாடு.

ஏமாளிகள்

 ஏமாளிகள்


புதிய கட்சிகள்!
புதிய முதலமைச்சர்கள்!
புதிய மந்திரிகள்!  
இவர்களுக்கு...
ஒட்டிய வயிற்றுடன்
ஓட்டுப் போடும் ஏமாளிகள்!


கவிஞர்
கவி  தென்றல்
ஆவடி, தமிழ் நாடு.

எதை அழிப்பது?

                    எதை அழிப்பது?


தனியொரு மனிதனுக்கு
உணவில்லையேல்...
இந்த
தரணியை அழித்திடுவோம்!
தரணியில் வாழும் மக்களுக்கு
உண்ணவில்லையே...
எதை அழிப்பது?


கவிஞர்
கவி  தென்றல்
ஆவடி, தமிழ் நாடு.

நினைவுத் தூண்கள்

                  நினைவுத் தூண்கள்


என் முகத்தில் வளர்ந்திருப்பது
தாடி அல்ல ...
பெண்ணே!
உன்
காதல் தோல்வியால்
நான்
கட்டி வைத்திருக்கும்
நினைவுத் தூண்கள்.

கவிஞர்
கவி  தென்றல்
ஆவடி, தமிழ் நாடு.

அரசியல் வாதி

                     அரசியல் வாதி




என் மகன் ...
கொலைக்காரன் !
கொள்ளைக்காரன் !
பிறரை ஏமாற்றுவதில் கில்லாடி !
நான் பெருமை படுகிறேன் !
நாளை ...
அவன் சிறந்த
அரசியல் வாதியாக
வருவான் என்று !


கவிஞர்
கவி  தென்றல்
ஆவடி, தமிழ் நாடு.

ஹைக்கூ கவிதைகள்

  
குடை

தன்னை நனைத்து
உன்னை காக்கும்
தன்னலமற்றவன்.  






வேசிக்கு

கொலை!
கொள்ளை!
கற்பழிப்பு!
வேலையில்லா திண்டாட்ட   
வேசிக்கு பிறந்த
குழந்தைகள்.




ரேஷன் அரிசி

ரேஷன் கடையில்
வாங்கி வந்த கல்லில்
அரிசியைப் பொறிக்கினாள்  
அம்மா!




 
கத்தி

கத்தியைக் காட்டி
வழி மறித்தான்
திருடன்!
கத்தியே
கூட்டத்தை சேர்த்தாள்  
அவள்!



  
மனிதன்

பெண்ணே!
நீ...
பெற்றவருக்கு பயந்து
தீயிக்கு இரையானாய்!  
நான்...
மற்றவருக்கு பயந்து
மனிதனானேன்.



கவிஞர்
கவி  தென்றல்
ஆவடி, தமிழ் நாடு.
 

மன்னித்து விடு சகோதரி

           மன்னித்து  விடு  சகோதரி

நல்ல  உயரம் ...
நான்  விரும்பும்  நிறம் ...
குனிந்த  தலை  நிமிராத குணம் ...
அடுத்தவரிடம்  அளவான  பேச்சு ...
கபடமில்லா முகம் ...
காண்பவரை  மயக்கும்  அழகு ...
எனக்கு  ஏற்றவள் ...
நீதான் !

உன்னை  பெண்  பார்க்க  வருமுன்
உன்  வீடு  காண
பின்  தொடர்ந்தேன் !
அப்போது  தான் தெரிந்தது
நீ ...

மணமானவள்  என்றும்
இரண்டு  குழந்தைக்கு  தாய்  என்றும் !
என்னை ...
மன்னித்து  விடு  சகோதரி .


                          கவிஞர்
                         கவி   தென்றல்
                         ஆவடி ,  தமிழ்நாடு .

தரமே தொழிலுக்கு உரமே

தரமே  தொழிலுக்கு  உரமே


உடல்  என்ற  மூன்றெழுத்தும்    
உயிரென்ற  மூன்றெழுத்தும்
தரமென்ற  மூன்றெழுத்தில்
இணைவதுதான்  கடமை .

ஆக்க  பணிகள்  அனைத்திலும்
ஊக்கங்  கொண்டு  பொருகளை
குறைநீக்க  வகை  செய்யனும்
நினைவில்  தரத்தை  இருத்தனும் . 

உலக  மெங்கும்  சந்தையில்
உருவாக்கும்  பொருள்  செல்லனும்
உலக மக்கள்  யாவரும் -அதை
ஓர் குரலில்  புகழனும் .

படித்ததினால்  வந்திடுமோ  தரம் -கருத்தோடு
பார்த்தால் தான் வருமே  தரம் .
தானே  உருவாகுமோ தரம் -கடின
உழைப்பால்  வருவதே  தரம் .

விளம்பரத்தால்  வருவதில்லை  தரம் -குறைந்த
விலையால்  நிலைப்பதில்லை தரம் .
ஆள்பலத்தல் வருவதில்லை  தரம் -கருத்து
அரவணைப்பால்  உருவாவதே  தரம் .


                கவிஞர்
               கவி   தென்றல்       
               ஆவடி ,  தமிழ்நாடு .    

விண் மீன்கள்

  விண் மீன்கள்


விண்ணவருக்கு ஒளி கொடுக்க
மின்னுகின்ற விண் மீன்களே
மண்ணில் வாழும் மாந்தர்க்கு
மனக்குறையை போக்கும் விண் மீன்களே!

உண்ண மறக்கும் குழந்தைகளுக்கு
உணவு ஊட்டும் தாய்மார்கள்
உன்னை நோக்கி கைக் காட்டி
உணவை ஊட்டி மகிழ்கின்றனர்!

வானநூல் அறிஞர்கள் யாவரும்,
வளம் வரும் உன்னைக் கண்டு,
காலம் நேரம் காற்று மழையை
கண்டிட உதவும் விண்மீன்களே!

தேவ மைந்தன் இயேசு கிறிஸ்து,
பாவ உலகில் பிறந்த அன்று
விண்ணில் தோன்றி யாவரையும்,
வியப்பில் ஆழ்த்திய விண்மீன்களே!



                                                             கவிஞர்
                                     கவி  தென்றல்
                                                     ஆவடி, தமிழ் நாடு.

Monday, November 22, 2010

ஒன்றுபட்டால்... உண்டு வாழ்வு !

    ஒன்றுபட்டால்... உண்டு வாழ்வு !


ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு !
நம்மில்...
ஒற்றுமை நீங்கிடின் அனைவருக்கும் தாழ்வு !
பாரதியின் கவிதை இது!
நமக்கு
பயன் தரும் மருந்து இது !

ஒரு கை ஓசைத் தருமா ?
இரு கைகள் இணைந்தால் தானே
ஓசை வரும் !
பள்ளி யிலே...
படிக்க வில்லையா?
பசு சிங்கம் கதை !

ஒற்றுமையாய் வாழ்ந்த போது
சிங்கம் பயந்தது !
வேற்றுமையாய் வாழ்ந்த போது
சிங்கம் பாய்ந்தது !
புறா வேடன் கதை
நமக்கு...
புரிய வைக்கும்
ஒற்றுமையை!

வேடன் விரித்த வலையிலே
சிக்கிக் கொண்ட புறாக்கள்
தம் உயிரை காத்து கொண்டது
உயர் ஒற்றுமையால் வந்ததல்லவோ ?
ஒற்றுமையாய் வாழ்ந்திடுவோம் !
வளமாய் வாழ்ந்திடுவோம் !
                                  

                                            கவிஞர்
                                            கவி தென்றல்
                                            ஆவடி, தமிழ்நாடு .





வளர்ச்சி

வளர்ச்சி
                                  
இளைய  சமுதாயமே ...
நீ
சுயமாக  சிந்தித்தால்...
வழி  பிறக்கும் !
சுயத்தொழில்  தொடங்கினால் ...
நல்ல  எதிர்காலம்  இருக்கும் !
என்னால்  என்ன  முடியும் ?
என  எண்ணாதே !
எல்லாம்  முடியும்
என  திடன்  கொள் !
வெற்றிப்பாதை
கரடு  முரடானது  தான்!

அதை
காட்டாறுப்  போல்
கடந்து  செல் !
தடைகளை  எல்லாம்
தகர்த்து  எறி!
தோல்வியை க் கண்டு
துவண்டு  விடாதே !
தோல்வியை  உன்
தோள் மீது  சுமந்து  செல் !
தோல்விதான்
வெற்றி  பாதைக்கு
வெளிச்சம்  தரும்  விளக்காகும் !
அன்றுதான்
உன்னுடைய  கடின  முயற்சி...
காண்பவரை  கண்விரிய  செய்யும் !
திறமை ...
திக்கெட்டும்  பரவும் !
உழைப்பை ...
உலகமே  போற்றும்!
அன்பு ...
அகிலமெல்லாம்  விளங்கும் !
பண்பு...
பிறரை  உன்பக்கம்  ஈர்க்கும்!
நாவடக்கம் ...
நல்லோரை  சேர்க்கும் !
சொல்வண்ணம்...
சொன்னதெல்லாம்  செய்யும் !
வளர்ச்சி
...
வளர்
ந்
தோரை  அண்ணாந்து
பார்க்க  வைக்கும் !


                                       கவிஞர்
                              கவி  தென்றல்
                               ஆவடி ,  தமிழ்நாடு .

ஏக்கம்

                  ஏக்கம்
       
        பிறந்தவுடன்
        கள்ளிப்பால்...
        பிழைத்து விட்டேன்
        நான்!
        தாயின் முலைப்பால்

        வளர்த்து விட்டது
        என்னை!
        பள்ளிக்குச் செல்ல
        பணமில்லை வீட்டில்!
        கூலி வேலைக்கு
        சென்றேன்
        குடும்பத்தைக் காக்க!  
        என் வயது பெண்கள்
        எல்லோருக்கும்
        திருமணம்!
        எனக்கு அந்நிலை
        எப்போது வருமோ?
                          

                        கவிஞர்
                          கவி தென்றல்
                          ஆவடி, தமிழ்நாடு.

       

தொலைக்காட்சி

                         தொலைக்காட்சி
                      

   அடப்பாவி!
   நீ   
   உருப்படுவாயா?
   புலம்பினாள்
   பாட்டி!


   இவனையெல்லாம்...

   பல்லைக்கடித்தார்
   தாத்தா!

   நல்ல சாவு
   உனக்கு வராதுடா...

   சாபமிட்டாள்
   அம்மா!

   அவனை ஏண்டீ 
   திட்டுறே?
   அவள்தான் அனுசரித்து போகணும்
   அங்கலாயீத்தார்
   அப்பா!

   இனிமே
   இந்த சீரியலை
   பார்க்க வேண்டாம்
   தொலைக்காட்சி நிகழ்ச்சியை
   திருப்பினாள்
   தங்கை!

                             கவிஞர்
                             கவி தென்றல்
                             ஆவடி, தமிழ்நாடு.

வரதட்சணை

                         வரதட்சணை

கை நிறைய வளையல்கள்!
கழுத்து நிறைய நகைகள்!
மாப்பிள்ளைக்கு வண்டி!
சூட்கேசில் பணம்!
சூழ...
புகுந்த வீடு புகுந்த
மறுநாள்........
வெடித்தது ஸ்டவ்!

                       கவிஞர்
                       கவி தென்றல்
                        ஆவடி  தமிழ்நாடு.

ஒற்றுமை

                           ஒற்றுமை

                          
அணிவகுத்து  செல்லும்
    எறும்புகளை  பார்!

கூட்டமாக  பறக்கும்
    பறவைகளைப்  பார்!

பூத்துக்  குலுங்கும்
    பூக்களைப்  பார்!
பள்ளிச்  செல்லும்
    குழந்தைகளைப்  பார்

எல்லைக்! காக்கும்
    வீரர்களைப்  பார்!
இவைகளில்...
எங்கேத்  தெரிகிறது?
சாதியும்,  மாதமும்!




                            கவிஞர்
                            கவி  தென்றல்
                            ஆவடி, தமிழ்நாடு.






Sunday, November 21, 2010

காதலர்களின் நம்பிக்கை

                              காதலர்களின்  நம்பிக்கை
                           
ஆலமரத்தின்  மேலிருந்து
சின்னக்குருவிகள்  இரண்டு
ஆடிப்பாடி  மகிழுதம்மா
நம்  காதலையும்  கண்டு !

கூரை  வீட்டின்  மேலிருந்து
கோழி  சேவல்  இரண்டும்
கூடி  கூடி  மகிழுதம்மா
நம்  காதலையும்  கண்டு !

லைலா  மஜுனு  காதல்  அல்ல
இந்த  நாட்டுப்புற  காதல் !
வயல்  வரப்பில்  வளர்ந்துவரும்
வளமை மிக்க  காதல் !                  

எதிர்ப்பு  எத்தனை  வந்தாலும்
எதிர்த்து  நிற்ப்போம்  நாங்கள் !
எத்தனை  பிறவிகள்  எடுத்தாலும்
எங்களைப்  பிரிக்க  முடியாது  நீங்கள் !

தம்பதிகளாய்  வாழ  எங்களை
வாழ்த்தி  விடுங்கள்  நீங்கள் !
சந்தோஷமாய்  நாங்கள்  வாழ
சற்று  வழி  விடுங்கள்  நீங்கள் !

                                                                     கவிஞர்
                                                        
கவி தென்றல்
                                                           ஆவடி,   தமிழ்நாடு .
 

வருந்தாதே வாழ்க்கை உனக்கும் உண்டு

வருந்தாதே  வாழ்க்கை  உனக்கும்  உண்டு
                 
          பதறாதே...
              காரியம் சிதறி விடும்!
          பகையாதே...
              மற்றவரை நேசி!
          கேளாதே...
              கேடுள்ளவைகளை!
          திகையாதே...
              திடன் கொள்!
          கூடாதே...
              தீயவரின் நட்பு!
         மறவாதே...
             பெற்றோரை மதித்திட!
         செய்யாதே...
             தீமை யாருக்கும்!
         நில்லாதே...
             எதிர்ப்பைக் கண்டு!
         சொல்லாதே...
             பொய்யை மட்டும்!
         அலையாதே...
             அடுத்தவர் பொருளுக்கு
         வளையாதே...
             வன்முறைக்கு!
         மறுக்காதே...
             மற்றவருக்கு உதவி செய்ய!
         நிறுத்தாதே...
             தானம் செய்வதை!
         அறுக்காதே...
             பந்த பாசத்தை!
         வெறுக்காதே...
             ஏழை எளியோரை!
         கலங்காதே...
             காலம் கனிந்து வரும்!
         வருந்தாதே...
             வாழ்க்கை உனக்கும் உண்டு!
                                                    கவிஞர்
                                       கவி தென்றல்
                                         ஆவடி, தமிழ்நாடு. 

தமிழ்நாடு

 தமிழ்நாடு

தென்நாடாம் பொன்நாடாம் நம்நாடு !      
செந்தமிழ் விளையாடும் தமிழ்நாடு!
பண்டைக் காலந்தொட்டு பண்போடு!
பாங்காக வளர்க்கப்பட்ட தமிழ்நாடு!


எத்தனையோ மொழியுண்டு நாம்நாட்டில்!
அத்தனைக்கும் வித்தான நாம் தமிழ்மொழி!
சத்தான சுகமுண்டு நம் மொழிக்கும்!
சொத்தாக போற்றிடுவோம் நம் எல்லோருக்கும்!

மூவேந்தர் ஆண்ட தமிழ்நாட்டில்,
முத்தாக காக்கப்பட்ட தமிழ் மொழியை!
தாய்போல காத்திடுவோம் நாம் மொழியை
தலை நிமிர்ந்து சொல்லிடுவோம் நாம் தமிழரென்று!

                                               
                                                        கவிஞர்
                                                கவி தென்றல்
                                                 ஆவடி, தமிழ்நாடு.

அம்மா

 அம்மா
                            
 அம்மா என்ற மூன்றெழுத்தில்
அமைவது தான் உன் தலைஎழுத்து!


பத்து மாதம் வயிற்றில் வைத்து
பருவம் வரை உனை பாதுகாத்து  
இல்லறம் ஒன்றை அமைத்து கொடுத்து
நல்லறம்  காண  செய்வார்  அம்மா !


தெய்வத்திலும்  சிறந்தவள்  அம்மாதான் -நம்
எதிரில்  நடமாடும்  தெய்வம்தான் !
தியாகத்தின்  எல்லை  அம்மாதான் -நாம்
தினசரி  தரிசிக்கும்  தெய்வம்  தான் !


சுமைகளை  மனதினில்  மறைத்திடுவாள் !
சுகங்களை  நமக்கு  தந்திடுவாள் !
இமைப்போல்  நம்மை  காத்திடுவாள் !
இன்புற  செய்தே மகிழ்ந்திடுவாள் !


இரத்தத்தை  பாலாக்கி தந்திடுவாள் !
இரவு  பகலாய்  நம்மை  காத்திடுவாள் !
நம்  பசியை  போக்கி மகிழ்ந்திடுவாள் !
தம்  பசியை  அதிலே  மறந்திடுவாள் !

                                                                              கவிஞர்
                                                          கவி  தென்றல்
                                                           ஆவடி  தமிழ்நாடு

Friday, November 19, 2010

ஏமாற்றம்


   
ஏமாற்றம்

  
    பத்து மாதம் சுமந்த
    தாய் !       
    படிப்பு, அறிவு தந்த
    தந்தை !
    பாசமிகுந்த
    தங்கை !
    நேசமிகுந்த
    சுற்றம் !
    அனைத்தையும் தொலைத்து விட்டு
    ஓடி வந்த
    நான்...
    மணவறையில்
    நீ
    மற்றொருவனுக்கு
    மாலையிடுவதை
    பார்க்கவா ?
கவிஞர்,
கவி தென்றல்.
ஆவடி, தமிழ்நாடு.