welcome

நண்பர்களுக்கு ஓர் இனிய வேண்டுகோள்! எனது ஒவ்வொரு படைப்பையும் படித்த பின் உங்களது கருத்துகளை பதிவு செய்ய வேண்டுகிறேன்.

Sunday, November 21, 2010

வருந்தாதே வாழ்க்கை உனக்கும் உண்டு

வருந்தாதே  வாழ்க்கை  உனக்கும்  உண்டு
                 
          பதறாதே...
              காரியம் சிதறி விடும்!
          பகையாதே...
              மற்றவரை நேசி!
          கேளாதே...
              கேடுள்ளவைகளை!
          திகையாதே...
              திடன் கொள்!
          கூடாதே...
              தீயவரின் நட்பு!
         மறவாதே...
             பெற்றோரை மதித்திட!
         செய்யாதே...
             தீமை யாருக்கும்!
         நில்லாதே...
             எதிர்ப்பைக் கண்டு!
         சொல்லாதே...
             பொய்யை மட்டும்!
         அலையாதே...
             அடுத்தவர் பொருளுக்கு
         வளையாதே...
             வன்முறைக்கு!
         மறுக்காதே...
             மற்றவருக்கு உதவி செய்ய!
         நிறுத்தாதே...
             தானம் செய்வதை!
         அறுக்காதே...
             பந்த பாசத்தை!
         வெறுக்காதே...
             ஏழை எளியோரை!
         கலங்காதே...
             காலம் கனிந்து வரும்!
         வருந்தாதே...
             வாழ்க்கை உனக்கும் உண்டு!
                                                    கவிஞர்
                                       கவி தென்றல்
                                         ஆவடி, தமிழ்நாடு. 

No comments:

Post a Comment