welcome

நண்பர்களுக்கு ஓர் இனிய வேண்டுகோள்! எனது ஒவ்வொரு படைப்பையும் படித்த பின் உங்களது கருத்துகளை பதிவு செய்ய வேண்டுகிறேன்.

Monday, November 22, 2010

தொலைக்காட்சி

                         தொலைக்காட்சி
                      

   அடப்பாவி!
   நீ   
   உருப்படுவாயா?
   புலம்பினாள்
   பாட்டி!


   இவனையெல்லாம்...

   பல்லைக்கடித்தார்
   தாத்தா!

   நல்ல சாவு
   உனக்கு வராதுடா...

   சாபமிட்டாள்
   அம்மா!

   அவனை ஏண்டீ 
   திட்டுறே?
   அவள்தான் அனுசரித்து போகணும்
   அங்கலாயீத்தார்
   அப்பா!

   இனிமே
   இந்த சீரியலை
   பார்க்க வேண்டாம்
   தொலைக்காட்சி நிகழ்ச்சியை
   திருப்பினாள்
   தங்கை!

                             கவிஞர்
                             கவி தென்றல்
                             ஆவடி, தமிழ்நாடு.

No comments:

Post a Comment