welcome

நண்பர்களுக்கு ஓர் இனிய வேண்டுகோள்! எனது ஒவ்வொரு படைப்பையும் படித்த பின் உங்களது கருத்துகளை பதிவு செய்ய வேண்டுகிறேன்.

Monday, November 22, 2010

வளர்ச்சி

வளர்ச்சி
                                  
இளைய  சமுதாயமே ...
நீ
சுயமாக  சிந்தித்தால்...
வழி  பிறக்கும் !
சுயத்தொழில்  தொடங்கினால் ...
நல்ல  எதிர்காலம்  இருக்கும் !
என்னால்  என்ன  முடியும் ?
என  எண்ணாதே !
எல்லாம்  முடியும்
என  திடன்  கொள் !
வெற்றிப்பாதை
கரடு  முரடானது  தான்!

அதை
காட்டாறுப்  போல்
கடந்து  செல் !
தடைகளை  எல்லாம்
தகர்த்து  எறி!
தோல்வியை க் கண்டு
துவண்டு  விடாதே !
தோல்வியை  உன்
தோள் மீது  சுமந்து  செல் !
தோல்விதான்
வெற்றி  பாதைக்கு
வெளிச்சம்  தரும்  விளக்காகும் !
அன்றுதான்
உன்னுடைய  கடின  முயற்சி...
காண்பவரை  கண்விரிய  செய்யும் !
திறமை ...
திக்கெட்டும்  பரவும் !
உழைப்பை ...
உலகமே  போற்றும்!
அன்பு ...
அகிலமெல்லாம்  விளங்கும் !
பண்பு...
பிறரை  உன்பக்கம்  ஈர்க்கும்!
நாவடக்கம் ...
நல்லோரை  சேர்க்கும் !
சொல்வண்ணம்...
சொன்னதெல்லாம்  செய்யும் !
வளர்ச்சி
...
வளர்
ந்
தோரை  அண்ணாந்து
பார்க்க  வைக்கும் !


                                       கவிஞர்
                              கவி  தென்றல்
                               ஆவடி ,  தமிழ்நாடு .

No comments:

Post a Comment