welcome

நண்பர்களுக்கு ஓர் இனிய வேண்டுகோள்! எனது ஒவ்வொரு படைப்பையும் படித்த பின் உங்களது கருத்துகளை பதிவு செய்ய வேண்டுகிறேன்.

Saturday, July 16, 2011

    சுமை

 





 












ஏர் பிடித்து உழுகின்ற
உன்னருகில்
ஏன் அந்த இளமொட்டு?
பசி!
பட்டினி!
கடன்!
இல்லாமை!
உன் தலையிலுள்ள சுமைகளை
அவள் தலையில் இறக்கி வைக்கவா?
ஏர் பிடித்து உழுதவன் வாழ்வில்
ஏற்றம் கண்டதுமில்லை!
இந்த உலகம்
வாழ விட்டதுமில்லை!
வேண்டாம்...
இந்த விபரீத விளையாட்டு!

                                                               கவிஞர்
                                                         கவி  தென்றல்
                                                    ஆவடி, தமிழ் நாடு.



இந்த கவிதையைப் படித்து விட்டு போகிறவரே!
உங்கள் கருத்தைச் சொல்லிவிட்டு போகலாமே!
      


  தொ(ல்)லைக்கட்சித் தொடர்
                          



                               முப்பது நிமிட நாடகம்!
                               அதில்...
                               இருபது நிமிடம்
                              விளம்பரங்கள்!


                                         கவிஞர்
                                    கவி  தென்றல்
                                ஆவடி, தமிழ் நாடு.





 இந்த கவிதையைப் படித்து விட்டு போகிறவரே!
உங்கள் கருத்தைச் சொல்லிவிட்டு போகலாமே!

 

Friday, July 15, 2011

  கரண்டியும்  எலுமிச்சைப் பழமும்

 

  










சிறியவருக்கும் பெரியவருக்கும்
சிறப்புதரும் போட்டியிது !
சிரத்தையுடன் செயல்பட்டால்
பரிசு தரும் போட்டியிது !

கரண்டிக்கும் வாயிக்கும்
கவ்வி வரும் உங்களுக்கும்
காணுகின்ற எங்களுக்கும்
களிப்பு தரும் போட்டியிது !

                                                           கவிஞர்
                                             கவி  தென்றல்
                                                  ஆவடி ,தமிழ்நாடு .






இந்த கவிதையைப் படித்து விட்டு போகிறவரே!
உங்கள் கருத்தைச் சொல்லிவிட்டு போகலாமே!

Sunday, July 10, 2011

   வாலிப ஞாயிறு

 

 














வாலிப சகோதரரே வாருங்கள் !
வாலிப சகோதரியே வாருங்கள் !
அகிலமும் படைத்த தேவனை
அனைவரும் போற்றுவோம் வாருங்கள் !

பொய் சொல்லக் கூடாது நீயும் -ஒரு
பொல்லாங்கும்  நினையாதே நீயும் !
அன்புடனே நடந்திடுவாய் நாளும் .
அனைவரையும் ஆட்கொள்வாய் நீயும் !

வாலிப நாளான இன்று -நல்
வாழ்வினை தொடங்கிடுவாய் நன்று !
வேதாகமத்தை கைக் கொண்டு நீயும்
தேவனை ஆட்கொள்வாய் இன்று !

முழங்கால் படியிட்டு நீயும்
முவ்வேளை ஜெபம் செய்வாய் நாளும் !
முவ்வுலக தேவனை நீயும்
முற்றிலும் அறிந்திடுவாய் நாளும் !

                                                             

                                                                      கவிஞர்
                                             கவி  தென்றல்
                                                           ஆவடி , தமிழ்நாடு .







இந்த கவிதையைப் படித்து விட்டு போகிறவரே!
உங்கள் கருத்தைச் சொல்லிவிட்டு போகலாமே!
  நல்ல கிறிஸ்து

 

 












பரிசுத்த தேவனை பாடிடுவோம் !
பரம பிதாவை பாடிடுவோம் !
உன்னதங்களில் உயர்ந்தவரை
ஒர்குர லெழுப்பி பாடிடுவோம் !

குருடரின் கண்களை திறந்தவராம் -உடல்
குறைகளை யெல்லாம் களைந்தவராம் !
பாவ மன்னிப்புக்கு பிறந்தவராம் -நம்
பாவத்திற்காக உயிர் துறந்தவராம் !

வேதப் பாடங்களை படித்திடுவோம் -நாம்
தேவ வாக்கின்படி நடந்திடுவோம் !
பகைவனை நண்பனாய் நினைத்திடுவோம் -உலக
பாவம் போக்க வழி செய்திடுவோம் !

நல்ல கிறிஸ்துவரென பெயரெடுப்போம்!
நாம் கிறிஸ்து வருகைக்கு காத்திருப்போம் !
வருகின்ற ஆண்டவரை வரவேற்போம் -அவரை
வான மண்டலத்தில் துதித்திருபோம் !

                                                                                              கவிஞர்
                   
                                           கவி  தென்றல்
                                                                                    ஆவடி , தமிழ்நாடு .






இந்த கவிதையைப் படித்து விட்டு போகிறவரே!
உங்கள் கருத்தைச் சொல்லிவிட்டு போகலாமே!
   சிறந்த மேய்ப்பர்

 

 














தாயை இழந்த சேயைப் போல
     தவித்து நின்றேனே !
தயவு நிறைந்த ஆண்டவர் என்னை
     தாங்கிக் கொண்டாரே !

பாவம் நிறைந்த எனது உள்ளம்
     பரிசுத்த மானதே !
தாபம் கொண்ட என்னை அவரும்
     தழுவிக் கொண்டாரே !

ஒளியிழந்த எந்தன் வாழ்வில்
     ஒளியாய் வந்தாரே !
வலுவிழந்த எனது ஜீவனுக்கு
     வாழ் வளித்தாரே !

சிதறிப் போன என்னைத் தேடி
     மந்தையில் சேர்த்தாரே !
சிறந்த மேய்ப்பர் இயேசுவே யென
     சிந்தைக் குளிர்ந்தேனே !

                                                           கவிஞர்
                                     கவி  தென்றல்
                                                 ஆவடி , தமிழ்நாடு .



இந்த கவிதையைப் படித்து விட்டு போகிறவரே!
உங்கள் கருத்தைச் சொல்லிவிட்டு போகலாமே!





 உன்னதங்களின் உயர்ந்தவர்

 

 












வாருங்கள் ஒன்றாய் சேருங்கள்
வாழ்த்துங்கள் நம் கர்த்தரை !
கேளுங்கள் தேவனை தேடுங்கள்
தேவனின் அருள் பெற !

ஓடுங்கள், துரிதமாய் ஒளியுங்கள்
உலகப் பாவத்தைக் கண்டு !
ஆடுங்கள் நன்றாய் பாடுங்கள்
ஆண்டவரின் அருளைக் கண்டு !

துக்கப்படுங்கள் , வெட்கப்படுங்கள்
துன்மார்க்கர் செயலைக் கண்டு !
பக்கம் வாருங்கள் பரவசமாகுங்கள்
பரமப் பிதாவைக் கண்டு !

நல்லதை செய்யுங்கள் கெட்டதை தள்ளுங்கள்
உள்ளதை உண்ணுங்கள் இருப்பதை உடுத்துங்கள்
மேய்ப்பரை நாடுங்கள் மேன்மையை காணுங்கள்
உன்னதங்களின் உயர்ந்தவரை உள்ளளவும் போற்றுங்கள் !
             
                                                                                       கவிஞர்
                                                                         
  கவி  தென்றல்
                                                                              ஆவடி , தமிழ்நாடு .




இந்த கவிதையைப் படித்து விட்டு போகிறவரே!
உங்கள் கருத்தைச் சொல்லிவிட்டு போகலாமே!