welcome

நண்பர்களுக்கு ஓர் இனிய வேண்டுகோள்! எனது ஒவ்வொரு படைப்பையும் படித்த பின் உங்களது கருத்துகளை பதிவு செய்ய வேண்டுகிறேன்.

Thursday, November 25, 2010

தரமே தொழிலுக்கு உரமே

தரமே  தொழிலுக்கு  உரமே


உடல்  என்ற  மூன்றெழுத்தும்    
உயிரென்ற  மூன்றெழுத்தும்
தரமென்ற  மூன்றெழுத்தில்
இணைவதுதான்  கடமை .

ஆக்க  பணிகள்  அனைத்திலும்
ஊக்கங்  கொண்டு  பொருகளை
குறைநீக்க  வகை  செய்யனும்
நினைவில்  தரத்தை  இருத்தனும் . 

உலக  மெங்கும்  சந்தையில்
உருவாக்கும்  பொருள்  செல்லனும்
உலக மக்கள்  யாவரும் -அதை
ஓர் குரலில்  புகழனும் .

படித்ததினால்  வந்திடுமோ  தரம் -கருத்தோடு
பார்த்தால் தான் வருமே  தரம் .
தானே  உருவாகுமோ தரம் -கடின
உழைப்பால்  வருவதே  தரம் .

விளம்பரத்தால்  வருவதில்லை  தரம் -குறைந்த
விலையால்  நிலைப்பதில்லை தரம் .
ஆள்பலத்தல் வருவதில்லை  தரம் -கருத்து
அரவணைப்பால்  உருவாவதே  தரம் .


                கவிஞர்
               கவி   தென்றல்       
               ஆவடி ,  தமிழ்நாடு .    

No comments:

Post a Comment