welcome

நண்பர்களுக்கு ஓர் இனிய வேண்டுகோள்! எனது ஒவ்வொரு படைப்பையும் படித்த பின் உங்களது கருத்துகளை பதிவு செய்ய வேண்டுகிறேன்.

Saturday, February 5, 2011

  அக்காப்பொண்ணு      

அக்காப்பொண்ணு ரத்தினமே !
அழகு பொன் சித்திரமே !
துள்ளியோடும் புள்ளிமானே  -தை
மாதத்தில் மணக்கப் போறேன் நானே !

மலையருவியில் குளிக்கும் போது ,
மறந்துப்போன வெட்கமே !
மணமுடித்து பள்ளியறையில்
வந்திடும் என் பக்கமே !

பாரிஜாதப் பூவைக் கொண்டு
மாலை ஒன்று கோர்க்கவா !
அழகு கொண்ட உந்தன் கழுத்தில்
அணிகலனாய் சேர்க்கவா !

பாலும் பழமும் பள்ளியறையில்
நிறையத்தானே  இருக்கு !
அதுக்கு மேலே ஆசை கனவுகள் உன்
அத்தானிடம் இருக்கு !

                   கவிஞர்
                   கவி  தென்றல்
                   ஆவடி , தமிழ்நாடு .

1 comment:

  1. கவிதையில் ஊடாடும் சந்தோஷம்
    என்னுள்ளும் புகுந்து கொண்டது
    நல்ல படைப்பு.வாழ்த்துக்கள்

    ReplyDelete