welcome

நண்பர்களுக்கு ஓர் இனிய வேண்டுகோள்! எனது ஒவ்வொரு படைப்பையும் படித்த பின் உங்களது கருத்துகளை பதிவு செய்ய வேண்டுகிறேன்.

Monday, February 28, 2011

         கேப்டன்

மதுரையில் பிறந்த என் மன்னவனே !
தமிழரைக் காக்க வந்த காவலனே !
மற்றவருக்கு உதவுகின்ற தலைவனே !
மக்கள் மனதில் நிலைத்திருப்பது நீதானே !
 

கருமுகில் வண்ணம் கொண்டவனே !
கருணை வடிவமாய் நிற்பவனே !
திரையுலகில் முடிசூட மன்னவனே !
தினமும் நாங்கள் நினைப்பது உன்னைத்தானே !

நண்பர்களை அரவணைக்கும் சந்திரனே !
பகைவர்களை சுட்டெரிக்கும் சூரியனே !
சாதி ,மத பேதங்களை வெறுப்பவனே !
சகோதர தத்துவத்தை வளர்ப்பவனே !

கொடுத்து மகிழ்வதும் நீ தானே !
கொடுத்து சிவப்பதும் உன் கை தானே !
ஏழை வாட்டத்தை போக்குவதும் நீ தானே !
நாங்கள் எல்லோரும் தொழுவது உன்னைத்தானே !

                                                                           
                                                                       கவிஞர்
                                                            கவி  தென்றல்
                                                                ஆவடி , தமிழ்நாடு .


நண்பர்களே ! உங்களுக்காக நான் எழுதுகிறேன் .
எனக்காக உங்கள் கருத்துக்களை எழுதுங்கள் . ப்ளீஸ் ...



No comments:

Post a Comment