welcome

நண்பர்களுக்கு ஓர் இனிய வேண்டுகோள்! எனது ஒவ்வொரு படைப்பையும் படித்த பின் உங்களது கருத்துகளை பதிவு செய்ய வேண்டுகிறேன்.

Sunday, February 6, 2011

சிகரெட்



புற்று நோய் வேண்டுமா ?
     புறப்பட்டு வாருங்கள் !
மாரடைப்பு வேண்டுமா ?
     விரைந்து வாருங்கள் !
மூச்சிரைப்பு வேண்டுமா ?
     முன்னேறி வாருங்கள் !
பசியின்மை , காசநோய்க்கு
     படியேறி வாருங்கள் !
அடுத்தவருக்கு நோய் பரவ
     ஆவலாய் வாருங்கள் !
அற்ப ஆயுள் வேண்டுமா ?
     அருகில் வாருங்கள் !
என்னைப் பற்ற வையுங்கள்
     எல்லாவற்றையும் பெற்றுக் கொள்ளுங்கள் !

                                                கவிஞர்
                                  கவி  தென்றல்
                                      ஆவடி , தமிழ்நாடு .

அன்பு உள்ளங்களே ! இந்த கவிதையை வாசித்தப்  பின்
உங்கள் எண்ண சிதறல்களை இங்கேத் தூவி விடுங்கள் !
 


No comments:

Post a Comment