welcome

நண்பர்களுக்கு ஓர் இனிய வேண்டுகோள்! எனது ஒவ்வொரு படைப்பையும் படித்த பின் உங்களது கருத்துகளை பதிவு செய்ய வேண்டுகிறேன்.

Monday, February 28, 2011

   விசித்திர நாடு









நாய் மனிதனைக் கடித்து விட்டால்
நஷ்டம் ஒன்றும் நாய்க்கு இல்லை!
மனிதன் நாயைத் துன்பப்படுத்தினால்
மாதக் கணக்கில் சிறைவாசம்!

யானை அப்பாவி மக்களை கொன்றுவிட்டால்
யாதொரு தண்டனையும் யானைக்கு இல்லை!
யானையை யாரேனும் காயப்படுத்தினால்
ஏராள தண்டனை மனிதனுக்குண்டு!

மனிதன் ஒருவன் வழியில் கிடந்தால்
தாண்டிச் செல்லும் இந்த சமுகம்!
நாய் ஒன்று நோய் கொண்டால்
பாய்ந்து வரும் அரசின் வாகனம்!

உலக நாடுகள் அனைத்தும்
உயர்வாக மதிக்கும் மனிதர்களை
கொடிய மிருகங்களுக்கு இரையாக
கொட்டிக் கொடுக்கும் எங்கள் நாடு.


                                                                கவிஞர்
                                                   கவி தென்றல்
                                                      ஆவடி, தமிழ்நாடு

 அன்பு உள்ளங்களே ! இந்த கவிதையை
வாசித்தப் பின் உங்கள் எண்ணங்களை இங்கே
தூவி விடுங்கள் . நன்றி !






1 comment:

  1. விசித்திர நாடு!! yes this is
    விசித்திர நாடு

    ReplyDelete