welcome

நண்பர்களுக்கு ஓர் இனிய வேண்டுகோள்! எனது ஒவ்வொரு படைப்பையும் படித்த பின் உங்களது கருத்துகளை பதிவு செய்ய வேண்டுகிறேன்.

Thursday, February 17, 2011

நவீன காகம்

    நவீன காகம்

தாகம் கொண்ட காகம் ஒன்று
தண்ணீர் தேடி அலைந்தது .
மூடியில்லா ஜாடி யொன்றை -வீட்டு
முற்றத்தில் இருக்கக் கண்டது .

       ஓடி வந்து அதனருகில்
      ஒய்யாரமாய் நின்றது .
       ஜாடியில் எட்டிப் பார்த்தது -அதன்
       அடியில் நீரைக் கண்டது .

குடிக்க வழி தெரியாமல்
குழம்பி போய் நின்றது .
சுற்றும் முற்றும் பார்த்தது .
சுறுசுறுப்பு அடைந்தது .

        கூல் ட்ரிங்க்ஸ் கடைக்கு சென்றது .
       குடித்துப் போட்ட ஸ்ட்ராவை எடுத்து வந்தது .
       ஜாடி உள்ளேப் போட்டது -தண்ணீரை
       ஜாலியாக உறிஞ்சு குடித்தது .

                                  கவிஞர்
                               கவி தென்றல்
                             ஆவடி , தமிழ்நாடு .

நில்லுங்கள் !கொஞ்சம் நில்லுங்கள் !
சொல்லுங்கள் ! உங்கள் கருத்தை சொல்லுங்கள் !

2 comments:

  1. .
    அறிவு ஜீவிகள் அதிகம் இருக்கும்
    பகுதிகளில் திரிந்த..காகமாக இருக்குமோ?
    பழைய கள்ளை புதிய மொந்தையில்
    குடித்த சுகம்.தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete