welcome

நண்பர்களுக்கு ஓர் இனிய வேண்டுகோள்! எனது ஒவ்வொரு படைப்பையும் படித்த பின் உங்களது கருத்துகளை பதிவு செய்ய வேண்டுகிறேன்.

Saturday, February 5, 2011

  ஆண்டவரின்  வருகை ! 

வருத்தப்பட்டு பாரம் சுமப்பவரே
கர்த்தரிடத்தில் ஓடி வாருங்கள் !
பாரத்தின் களைப்பைப் போக்கி
உனக்கு பரவசம் அளிப்பாரே !

எல்லையில்லா வல்லமை உள்ளவரே -எங்கள்
  தொல்லை எல்லாம் நீக்க வந்தவரே !
சொல்லிலடங்கா அற்புதம் செய்து
எங்களை ஆட் கொண்டவரே

உந்தன் சாயலில் எங்களை படைத்தீரே !
உலகை படைத்து எமக்கு அளித்தீரே !
எந்தன் பாவத்தைப் போக்க
உந்தன் ஜீவனை விட்டீரே !

வாழ்வளித்த ஆண்டவர் வருகை
எந்த நாள் வருமோ ?
அந்த நாளை எந்தன் ஆத்மா
அதி ஆவலாய் தேடுதே !

                    கவிஞர்
                    கவி  தென்றல்
                    ஆவடி, தமிழ்நாடு

No comments:

Post a Comment