welcome

நண்பர்களுக்கு ஓர் இனிய வேண்டுகோள்! எனது ஒவ்வொரு படைப்பையும் படித்த பின் உங்களது கருத்துகளை பதிவு செய்ய வேண்டுகிறேன்.

Tuesday, January 4, 2011

நல்லதுக்கு காலமில்லையே

நல்லதுக்கு காலமில்லையே! - இவ்வுலகில்
நல்லவர்க்கு காலமில்லையே
உள்ளதை உள்ளபடி சொன்னாலும்
உலகம் அதை நம்பவில்லையே!

எத்தனை இன்னல்கள்
எப்படித்தான் வந்தாலும்
அப்படியே சொன்னாலும்
அடுத்தவர் நம்பவில்லையே! - அது
அறிந்தவர்க்கும் விளங்கவில்லையே!
நல்லவர் சொன்னதை,
நாடே செய்தாலும்
புல்லர்களுக்கு புரியவில்லையே! அவர்கள்
புத்தியிலும் ஏறவில்லையே!

ஏழை எளியோர்க்கு சோறில்லையே!
ஏழடுக்கு மாளிகையில் பசியில்லையே!
ஏற்றத் தாழ்வு  இங்கே அழியவில்லையே !
எதிர்த்தவர்கள் இவ்வுலகில் வாழ்வதில்லையே  !

                              கவிஞர்
                             கவி  தென்றல்
                            ஆவடி, தமிழ் நாடு.

1 comment:

  1. ஏழை எளியோர்க்கு சோறில்லையே!
    ஏழடுக்கு மாளிகையில் பசியில்லையே!
    ஏற்றத்தாழ்வு எங்கே அழியவில்லையே!
    எதிர்த்தவர்கள் இவ்வுலகில் வாழ்வதில்லையே !
    உண்மைதான்... அழகான கவிதை

    ReplyDelete