welcome

நண்பர்களுக்கு ஓர் இனிய வேண்டுகோள்! எனது ஒவ்வொரு படைப்பையும் படித்த பின் உங்களது கருத்துகளை பதிவு செய்ய வேண்டுகிறேன்.

Tuesday, January 4, 2011

  ஆண்டவரின் வருகை

வருகிறார் ! வருகிறார் ! வருகிறார் !
வல்லமை தேவன் வருகிறார் !
உலகின் முடிவில் நியாயம் தீர்க்க
உன்னத தேவன் வருகிறார் !

கனி கொடாத மரங்களை வெட்டி
பாழும் நெருப்பில் போடவும் ,
நீதி தவறா மனிதர்களை தன்
வாழும் இடத்தில் சேர்க்கவும் ,
வருகிறார் ! வருகிறார் ! வருகிறார் !
வல்லமை தேவன் வருகிறார் !

கள்வர் வருகையை கனவான் அறிந்தால்
காத்துக் கொள்வான் தன் உடைமைகளை !
கர்த்தர் வருகை அவ்விதமிருக்கும்
காத்துக் கொள் உன் ஆத்துமாவை !
வருகிறார் ! வருகிறார் ! வருகிறார் !
வல்லமை தேவன் வருகிறார் !

                            கவிஞர்
                         கவி  தென்றல்
                        ஆவடி , தமிழ்நாடு .

No comments:

Post a Comment