welcome

நண்பர்களுக்கு ஓர் இனிய வேண்டுகோள்! எனது ஒவ்வொரு படைப்பையும் படித்த பின் உங்களது கருத்துகளை பதிவு செய்ய வேண்டுகிறேன்.

Tuesday, January 4, 2011

 புத்தாண்டே வருக

புத்தாண்டே வருக !
புது  பொலிவுடனே  வருக !
கடந்த ஆண்டு செழிப்பினை
கையோடு கொண்டு வருக !

ஏழை ,எளியோர் வாழ்வு முன்னேற
எழுச்சிக் கொண்டு நீ வருக !
வாழத் துடிக்கும் மக்களுக்கு
வழித் துணையாய் நீ வருக !

புயல் ,பூகம்பம், சுனாமி வேண்டாம் !
போர், கலகம், தீவிரவாதம் வேண்டாம் !
கொலை, கொள்ளை,பாலியல் வேண்டாம் !
சாதி, மத, சமயம் வேண்டாம் !

உலக மக்கள் ஒற்றுமையாய் வாழ,
உலக நாடுகள் சமாதானத்தை நாட,
நல்லதையே எதிர்நோக்கும் எங்களுக்கு
நன்மைகள் செய்திட நீ வருக !

கடந்த கால நிகழ்வுகளைக் கண்டு
கண்ணொளி இழந்த எங்களுக்கு 
புத்தொளியாய், புது பெலனாய்
புறப்பட்டு வா புத்தாண்டே !

                       கவிஞர்
                      கவி  தென்றல்
                     ஆவடி, தமிழ்நாடு .     

No comments:

Post a Comment