welcome

நண்பர்களுக்கு ஓர் இனிய வேண்டுகோள்! எனது ஒவ்வொரு படைப்பையும் படித்த பின் உங்களது கருத்துகளை பதிவு செய்ய வேண்டுகிறேன்.

Thursday, January 20, 2011

        நாகரிக மோகம்


நாகரிக மோகம் கொண்டு
நகரை நோக்கி செல்லுகின்ற
நண்பனே! எனதுயிர் நண்பனே!

ஊரை விட்டு ஊர் சென்று
உழைக்கும் எண்ணம் ஏன் வந்தது?
நண்பனே! எனதுயிர் நண்பனே!

ஏர் பிடித்து உழுகின்ற உந்தன் கைகள்
என்றுமே தாழ்ந்ததில்லை பிறர்கையில்!
நாட்டிற்க்கு நீங்கள்தான் உயிர் நாடி
நாங்கள் எல்லோரும் உங்கள் பின்னாடி!

சுற்றுப் பயணம் செல்வதென்றால் சென்றுவா!
சுகாதாரம் அங்கில்லை கண்டுவா!
வேலைக்கிடைப்பதென்றால் குதிரைக் கொம்பு!
வேண்டுமென்றே வாங்க வேண்டாம் ஊர்வம்பு.

ஏமாற்றி பிழப்பவனே அறிவாளி அங்கே
ஏமாறி வாழ்பவனே உழைப்பாளி!
சோம்பேறிக்கு சொர்க்கம் நகரம்தான் - அங்கே
உழைப்பாளிக்கு என்றுமே நரகம்தான் .


                              கவிஞர்
                             கவி  தென்றல்
                            ஆவடி, தமிழ் நாடு

அன்பு உள்ளங்களே ! இந்த கவிதையை வாசித்தப்  பின்
உங்கள் எண்ண சிதறல்களை இங்கேத் தூவி விடுங்கள் !
 

No comments:

Post a Comment