welcome

நண்பர்களுக்கு ஓர் இனிய வேண்டுகோள்! எனது ஒவ்வொரு படைப்பையும் படித்த பின் உங்களது கருத்துகளை பதிவு செய்ய வேண்டுகிறேன்.

Tuesday, January 4, 2011

கல்யாணப் பெண்ணின் கதறல்

சின்ன சின்ன ரோசாவே!
சிவந்த இதழ் ரோசாவே!
வண்ண வண்ண ரோசாவே!
வாசனை உள்ள ரோசாவே!

அள்ளி முடித்த கூந்தலிலே!
கிள்ளி வைத்த ரோசாவே!
பள்ளி அறையின் கட்டிலிலே!
சொல்லிக் கொடுத்திடு ராசாவே!

மங்கை எந்தன் அணைப்பினிலே
மயங்க வந்த ராசாவே!
சங்கமம் ஆகும் வேளையிலே
எங்கே போனாய் ராசாவே!

அந்தி மயங்கும் மாலையிலே!
தந்தி வந்த வேளையிலே!
கண்ணா உந்தன் நினைவினிலே!
கலங்கி நின்றேன் தனிமையிலே!

இறந்துப் போன உன்னிடத்தில்
பறந்து வந்து சேர்ந்திடுவேன்!
பரந்த உந்தன் மார்பினிலே
சிறந்து வாழ வந்திடுவேன்!

                     கவிஞர்
                    கவி  தென்றல்
                  ஆவடி, தமிழ் நாடு.

No comments:

Post a Comment