welcome

நண்பர்களுக்கு ஓர் இனிய வேண்டுகோள்! எனது ஒவ்வொரு படைப்பையும் படித்த பின் உங்களது கருத்துகளை பதிவு செய்ய வேண்டுகிறேன்.

Tuesday, January 4, 2011

 பந்தை கடத்தும் போட்டி

பந்தை கடத்தும் போட்டியில்
பங்கு பெற  வாருங்கள் !
பாங்குடனே  கலந்துக்கொண்டு
பாராட்டு பரிசுகளை வெல்லுங்கள் !

வட்டம் ஒன்று அமைத்து
வரிசையாக நில்லுங்கள் !
பந்தைக் கையால் பிடித்து
பக்கம் நிற்பவரிடம் கடத்துங்கள் !

ஊதல் சத்தம் கேட்கும்  போது
உன்னிடத்தில் பந்து இருந்தால்
உவகையோடு  வெளியேற
உள்ளம் உனக்கு  வேண்டுமே !
                                 
                                      
                         கவிஞர்
                       கவி  தென்றல்
                     ஆவடி , தமிழ்நாடு .

No comments:

Post a Comment