welcome

நண்பர்களுக்கு ஓர் இனிய வேண்டுகோள்! எனது ஒவ்வொரு படைப்பையும் படித்த பின் உங்களது கருத்துகளை பதிவு செய்ய வேண்டுகிறேன்.

Tuesday, December 7, 2010

           கூடி  வாழ்வோம்

காகம் இரையை கண்டுவிட்டால்
கத்திக்  கூப்பிடும் தன் இனத்தை !
கூட்டத்தில் ஒன்று இறந்திட்டால்
கூவியே சேர்த்திடும் பெரும் கூட்டத்தை !

எறும்பு உணவை பார்த்து விட்டால்
இழுத்துவரும் தன் கூட்டத்தை !
எறும்பு ஒன்று இறந்திட்டால்
ஏந்தி செல்லுமே சோகத்தால் !

பாதையில் ஒருவருக்கு விபத்தென்றால்
பயந்து ஒதுங்குகிறோம் நாமெல்லாம் !
அடுத்த வீட்டில் தீ யென்றால்
அலச்சியம் செய்கிறோம் நாமெல்லாம் !

குறைந்த அறிவு ஜீவனெல்லாம்
கூடி வாழ்வதை பார்த்தோமே !
ஆறறிவு மனிதன் நாமெல்லாம்
அவைகளை போல வாழ்வோமே !

                       கவிஞர்
                       கவி  தென்றல்
                       ஆவடி , தமிழ்நாடு .

1 comment:

  1. நல்லா இருக்கு சார்! தொடர்ந்து எழுதுங்கள்.

    ReplyDelete