welcome

நண்பர்களுக்கு ஓர் இனிய வேண்டுகோள்! எனது ஒவ்வொரு படைப்பையும் படித்த பின் உங்களது கருத்துகளை பதிவு செய்ய வேண்டுகிறேன்.

Tuesday, March 1, 2011




மனோதத்துவம்


குடி குடியைக் கெடுக்கும்
உண்மைதான் !
அதை படித்ததும் ...
குடிக்கத் தோன்றுகிறதே !

  
புகைப்பிடிப்பது உடம்புக்கு தீங்கானது
மறுக்கவில்லை !
வாசகத்தை படித்ததும் ...
புகைப் பிடிக்க தூண்டுகிறேதே !
  
புகையிலை மெல்லுவது உடம்புக்கு தீங்கு
புரிகிறது !
படித்ததும் ...
புகையிலை போட மனம் தாவுகிறேதே !

  
போதைப் பாக்கு புற்று நோய் தரும்
தெரியும் !
பாக்கெட்டை பார்த்ததும் ...
வாய் பரப்பரக்குதே !
 

ஏட்டிக்குப் போட்டி செய்யும்
ஏடாக்கூடமனிதனின்
மனோதத்துவத்தை மனதில் கொண்டு ...
மக்களை ஏமாற்றும் விளம்பரங்கள் !
அதில் ,
மயங்கி ஏமாறும் மக்கள் !


                                                        கவிஞர்
                                           கவி  தென்றல்
                                                ஆவடி , தமிழ்நாடு .


நண்பர்களே ! உங்களுக்காக நான் எழுதுகிறேன் .
எனக்காக உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்.

1 comment:

  1. மனோதத்துவத்தை மனதில் கொண்டு ...
    மக்களை ஏமாற்றும் விளம்பரங்கள் !
    We must awaken.

    ReplyDelete