welcome

நண்பர்களுக்கு ஓர் இனிய வேண்டுகோள்! எனது ஒவ்வொரு படைப்பையும் படித்த பின் உங்களது கருத்துகளை பதிவு செய்ய வேண்டுகிறேன்.

Tuesday, March 15, 2011

     
நெருப்பு


 


















உணவு சமைக்கும் மாந்தர்க்கு
உற்றத் துணையாய் இருந்திடுவாய்!
உலக ஆற்றல், அழிவு செயல்களுக்கு
உதவிகள் பலவும் செய்திடுவாய்!

இல்லத்தரசியின் சமையல் அறையில்
இணைப்பிரியா தோழியாய் இருந்திடுவாய்!
வரதட்சணையின் கொடுமைக்கு
வாலிபபெண்ணை பலிக் கொடுப்பாய்!

இருளில் செல்லும் மனிதருக்கு
ஒளி விளக்காய் இருந்திடுவாய்!
வானில் செல்லும் விண்கலத்திற்கு
வழித் துணையாய் சென்றிடுவாய்!

தீவிரவாத சக்திகளுக்கு
தீனியாக இருந்திடுவாய்!
மின்சாரம் இல்லா வீடுகளில்
மின் விளக்காய் எரிந்திடுவாய்!

நல்ல செய்கை அனைத்திற்கும்
நண்பனாக இருந்திடுவாய்!
தெய்வதிரு சன்னதியில்
தீப ஒளியாய் மிளிர்ந்திடுவாய்!

ஆக்கத் தொழில் அனைத்திற்கும்
ஊக்கம் பல கொடுத்திடுவாய்!
மக்காப் பொருளை அழித்து
மண்ணோடு கலக்க செய்திடுவாய்!

நல்லவர் உன்னை நாடி வந்தால்
நன்மைகள் பல செய்திடுவாய்!
புல்லர்கள் உன்னை தேடிவந்தால்
பூமியில் அவர்களை அழித்திடுவாய்!

எல்லாம் அறிந்த மனிதர் நாம்
நல்ல நெருப்பை வணங்கிடுவோம்!
சொல்லாவண்ணம் துயரங்களை
இல்லாவண்ணம் செய்திடுவோம்!



                                                                 கவிஞர்
                                                      கவி  தென்றல்
                                                          ஆவடி, தமிழ் நாடு. 



இந்த கவிதையைப் படித்து விட்டு போகிறவரே!
உங்கள் கருத்தைச் சொல்லிவிட்டு போகலாமே!

No comments:

Post a Comment