welcome

நண்பர்களுக்கு ஓர் இனிய வேண்டுகோள்! எனது ஒவ்வொரு படைப்பையும் படித்த பின் உங்களது கருத்துகளை பதிவு செய்ய வேண்டுகிறேன்.

Saturday, March 12, 2011

 சிறந்து வாழ்வோம்!

  தீமை யார்க்கும் செய்திட்டால்...
  திரும்ப உனைவந்து சேர்ந்து விடும்!
  நன்மை பிறருக்கு செய்திட்டால்...
  நாளை உன்னை அதுகாக்கும்!

  பெற்றோரை மதிக்க மறந்திட்டால்...
  மற்றவர் உனை இகழ்ந்திடுவர்!
  உற்றார் உறவினரை நேசித்தால்...
  உரியக் காலத்தில் துணையாவர்!

  கூட நட்பைத் தேடிச் சென்றால்...
  கோடி துன்பம் நாடி வரும்!
  வருத்தப்பட்டு மனம் நொந்தால்...
  வாழ்வதில் உனக்கு பலனில்லை!

  பதறியாற்றும் செய்கை யெல்லாம்...
  முடிவில் சிதறிதானே போய்விடும்!
  ஏற்றத்தாழ்வை எதிர்த்திட்டால்...
  ஏழ்மையை உலகில் தவிர்த்திடலாம்!

  கல்வியை அனைவரும் கற்றிட்டால்...
  கல்லாமையை இல்லா செய்திடலாம்!
  வாழும் உலகில் பகை வேண்டாம்...
  வாழ்வோம் நாம் நண்பர்களாய்!

  முயற்சி உன்னை மனிதனாக்கும்...
  முயன்றால் உனக்கு தோல்வியில்லை!
  செய்யும் தொழிலே தெய்வமென...
  சிறந்து வாழ்வோம் இப்புவிதனிலே!

                                                          கவிஞர்
                                              கவி  தென்றல்
                                                  ஆவடி, தமிழ் நாடு.


இந்த கவிதையைப் படித்து விட்டு போகிறவரே!
உங்கள் கருத்தைச் சொல்லிவிட்டு போகலாமே!

No comments:

Post a Comment