welcome

நண்பர்களுக்கு ஓர் இனிய வேண்டுகோள்! எனது ஒவ்வொரு படைப்பையும் படித்த பின் உங்களது கருத்துகளை பதிவு செய்ய வேண்டுகிறேன்.

Friday, March 18, 2011




  அற்புத ஆண்டவர்



 























  நிலையற்ற உலகில் ஆயிரம் இருந்தும்
      மன நிம்மதியில்லை !
நீ ஆண்டவரையே அண்டியிருந்தால்
      அதிகத் தொல்லையில்லை !

ஆலயம் சென்று ஆண்டவரையே
      துதித்துப் பாடிவிடு !
பலைவனமாகிய உந்தன் வாழ்க்கை
      நல் சோலை வனமாகும் !

கல்வாரி மலையில் நம் பாவங்கள் போக்க
      தம் உயிரை நீத்தாரே !
இஸ்ரவேலுக்காக செங்கடலை
      இரண்டாய் பிரித்தாரே !

குருடு , செவிடு , ஊமை , குஷ்டம்
      குறைப் போக்கினாரே !
நம்பிக்கையுள்ள மார்த்தாளின் சகோதரனுக்கு
      உயிரைக் கொடுத்தாரே !

                                                                                 கவிஞர்
                                                                   கவி  தென்றல்
                                                                      ஆவடி , தமிழ்நாடு .

இந்த கவிதையைப் படித்து விட்டு போகிறவரே!
உங்கள் கருத்தைச் சொல்லிவிட்டு போகலாமே!

No comments:

Post a Comment