welcome

நண்பர்களுக்கு ஓர் இனிய வேண்டுகோள்! எனது ஒவ்வொரு படைப்பையும் படித்த பின் உங்களது கருத்துகளை பதிவு செய்ய வேண்டுகிறேன்.

Thursday, March 10, 2011

 இறப்பிலும் கதறல்

 என் ...
இரு  கால் பாதங்களுக்கிடையில்
உன் முகம் புதைத்து
நீ கதறி அழுதபோது ,
துக்கத்தால் என் மனம் தவித்தது !
உள்ளுக்குள் நான் அழுகிறேன் .
கண்களில் கண்ணீர் வரவில்லை !

என் ...
நெஞ்சில் விழுந்து
நெடுநேரம் புரண்டு அழும்
நம் அருமை மகள் !
எழுந்து ,
அவளைத் தேற்ற முயல்கிறேன் .
என் உடல் ,
ஒத்துழைக்க மறுக்கிறது !

நம் ...
காதல் திருமணத்திற்கு கூட
வராத உன் தந்தை ,
இன்று வந்திருக்கார் .
என் அருகிலேயே நிற்கிறார் !
அவருக்கு ,
நன்றி சொல்ல முனைகிறேன்.
முடியவில்லை !

கண்டும் காணாது இருக்கும்
நம்...
உறவினர்களும் , தெருவாசிகளும்
என்னை சுற்றி
வலம் வருகின்றனர் !
மகிழ்ச்சியில்
என் மனம் திளைக்கிறது !
சிரிக்க நினைக்கிறேன் .
ஏனோ
வாய் திறக்க இயலவில்லை !

எனது ஊர்வலத்தில் ...
வான வேடிக்கைகளும் , மாலையும் ,பூக்களும்
சாலை முழுவதும் .
என்னை சுமந்த நால்வரில்
நம்
அருமை மகனும் ஒருவன் !
நான் அவனை
முழுவதும் பார்க்க முடியவில்லை .
என் மகனின் முகத்தை
காண மாட்டேனா என்ற
ஏக்கம் ,பரிதவிப்பு !

குழியினுள் என்னை படுக்க வைத்ததும்
என் மனம் ,
மகனைக்  காணத் துடித்தது !
கடைசியில் ...
ஒரு பிடி மண்ணை
என் மீது போடும் போது ,
என்  மகனின் முகத்தை
ஆசைத்தீர கண்ட சந்தோஷத்துடன்
என் ஆவி ,
என்னை விட்டுப் பிரிந்தது !

                                          கவிஞர்
                             கவி தென்றல்
                                 ஆவடி , தமிழ் நாடு .



நண்பர்களே ! உங்களுக்காக நான் எழுதுகிறேன் .
எனக்காக உங்கள் கருத்துக்களை எழுதுங்கள் ..

No comments:

Post a Comment