welcome

நண்பர்களுக்கு ஓர் இனிய வேண்டுகோள்! எனது ஒவ்வொரு படைப்பையும் படித்த பின் உங்களது கருத்துகளை பதிவு செய்ய வேண்டுகிறேன்.

Saturday, March 12, 2011

       பாடுகள்

கல்வாரி மலை மேலே எந்தன்
     கர்த்தர் நின்றாரே !
மரசிலுவையின் மேலே அவர்
     மரண எல்லையில் நின்றாரே !

முடிசூடா எந்தன் இயேசுவின் சிரசில்
     முள்முடி வைத்தனரே !பிரம்பால்
மூர்க்கமாய் அடித்தனரே !

கருணை நிறைந்த கர்த்தரின் முகத்தில்
     காரி உமிழ்ந்தனரே !தோல்
வாரினால் அடித்தனரே !

இரக்கம் கொண்ட ஆண்டவர் கை கால்களில்
     இரும்பு ஆணியை அடித்தனரே ! குடிக்க
கசப்புக் காடியை கொடுத்தனரே !

பிதாவே இவர்களை மன்னியும் என்று
     பிராத்தனை செய்தாரே !சாந்த
சொருபமாய் நின்றாரே !

என்னை நினைத்தருளும் என்ற கள்வனுக்கு
     பரலோகத்தில் இடமளித்தாரே !அவன்
பாவத்தை மன்னித்தாரே !

என் தேவனே எனை ஏன் கைவிட்டீரென
     ஏக்கமாய் அழைத்தாரே !தன்
ஜீவனை விட்டாரே !
                          
                                     கவிஞர்
                       கவி  தென்றல்
                           ஆவடி , தமிழ்நாடு .



நண்பர்களே ! உங்களுக்காக நான் எழுதுகிறேன் .
எனக்காக உங்கள் கருத்துக்களை எழுதுங்கள் ..

No comments:

Post a Comment