welcome

நண்பர்களுக்கு ஓர் இனிய வேண்டுகோள்! எனது ஒவ்வொரு படைப்பையும் படித்த பின் உங்களது கருத்துகளை பதிவு செய்ய வேண்டுகிறேன்.

Friday, April 1, 2011




அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு!
 


 











சர்க்கரை நோய்  உடலில் வந்து விட்டால்
சாகும் வரையில் உன்னை விட்டு அகலாது !
மாத்திரை மருந்து நீ உட்கொண்டாலும்
மரணம் வரை உன்னை விட்டு விலகாது !

கோட்டைக் கதவை திறந்து வைத்தால்
கோழை மன்னன் கூட படையெடுப்பான் !
சக்கரை நோய்க்கு  நாம் இடம் கொடுத்தால்
சகல நோயும் உனக்குள் வந்து விடும் !

சிறுக் காயம் உடலில் பட்டாலும்
சித்திரவதையை நீ அனுபவிப்பாய்
தூக்கம் உனக்கு  சரியாய் வராது
சுறுசுறுப்பும் உடலில் இருக்காது !

வாலிபமான உன் உடல் வாகு
வயோதியனைப்  போல ஆகிவிடும் !
ஆசைபட்ட எந்த உணவையும்
அளவுக்கு மேல் தின்ன முடியாது !

கல்லீரல்  , மண்ணீரல்  , கிட்னிஎல்லாம்
கலகலத்து உழைக்க மறுத்து விடும் !
ரத்தத்தில் சர்க்கரை கலந்து விட்டால்
இதயம் எந்த நேரத்திலும் நின்று விடும் !

உண்ணும் உணவில் கலப்படம் !
தின்னும் இடத்தில் கலப்படம் !
விளையும் இடத்தில் கலப்படம் !
விளைந்த உணவு பொருளில் கலப்படம் !

அதிகாலையில் சாலையிலே
அணி வகுக்கும் நம்மவர்கள் ,
சிறுவர் முதல் பெரியவர் வரை
சிரம பட்டு நடக்கின்றனர் , ஓடுகின்றனர் !

பரம்பரையாக வரும் நோயுமல்ல !
பாதியில் வரும் நோயுமல்ல !
கலப்படமான உணவுகளாலே
கலந்து வரும் நோயிது !

உண்ணும் உணவை தேர்ந்தெடுத்து
உண்ணும் பழக்கம் வர வேண்டும் !
உடற் பயிற்சியை செய்திடணும் !
உயர்ந்த வாழ்வினை பெற்றிடணும் !

                                                      
                                                        கவிஞர்
                              கவி தென்றல்
                                               ஆவடி , தமிழ்நாடு .


இந்த கவிதையைப் படித்து விட்டு போகிறவரே!
உங்கள் கருத்தைச் சொல்லிவிட்டு போகலாமே!

No comments:

Post a Comment