welcome

நண்பர்களுக்கு ஓர் இனிய வேண்டுகோள்! எனது ஒவ்வொரு படைப்பையும் படித்த பின் உங்களது கருத்துகளை பதிவு செய்ய வேண்டுகிறேன்.

Friday, April 8, 2011

அடைந்து விட்டோம் ஐ .எஸ் .ஒ


அயராது உழைத்திட்டோம் -நாம்
ஐ .எஸ் .ஒவை  .பெற்றிட்டோம் .
அயல் நாட்டு சந்தைக்குள் -நாம்
அல்லலின்றி நுழைந்திட்டோம் .

பன்னாட்டு சான்றிதழ் -நம்
பணியாளரது கடமை .
பங்கம் வராமல்  காப்பது-நம்
அனைவரது கடமை .

ஒன்றுக்கூடி உழைத்திடுவோம் .
உற்பத்தியை பெருக்கிடுவோம் .
ஒரேக் குழுவாக செயல்படுவோம் .
உலகளவில்  சிறந்திடுவோம் .

உற்பத்தி பொருளின் குறைகளை-நாம்
உடனுக்குடன் நீக்கிடுவோம்  !
வாடிக்கையாளர் அதிருப்தியை -நாம்
வராமல் இனி !தடுத்திடுவோம்

                                                         கவிஞர்
                                           கவி  தென்றல்        

                                               ஆவடி , தமிழ்நாடு .

இந்த கவிதையைப் படித்து விட்டு போகிறவரே!
உங்கள் கருத்தைச் சொல்லிவிட்டு போகலாமே!

No comments:

Post a Comment