welcome

நண்பர்களுக்கு ஓர் இனிய வேண்டுகோள்! எனது ஒவ்வொரு படைப்பையும் படித்த பின் உங்களது கருத்துகளை பதிவு செய்ய வேண்டுகிறேன்.

Saturday, July 2, 2011

               மலை














சாலைகள் அமைவதும் உன்னாலே -நல்
கோயில்கள் அமைவதும் உன்னாலே !
கல் தச்சர் கை வண்ணத்தில்
நல் சிலைகள் உருவாகுவதும் உன்னாலே !

அம்மி, உரல், ஆட்டுக்கல்
அனைத்தும் ஆவதும் உன்னாலே !
சித்த வைத்தியம் பிறந்ததும் உன்னாலே !
சித்த வைத்தியர் வாழ்ந்ததும் உன்னாலே !

முற்றும் துறந்த முனிவர்கள்
முற்றுப் பெற்றதும் உன் மேலே !
நதிகள் பிறப்பதும் உன் மேலே -நல்
மூலிகை வளர்வதும் உன் மேலே !

வீட்டைக் காக்கும் மனிதர் போல் -நம்
நாட்டைக் காப்பதும் நீதானே !
உலக சாதனைக் கண்டிட -வீரர்களுக்கு
உறுதுணையாய் இருப்பதும் நீதானே !

                                                                              கவிஞர்
                                                                 கவி  தென்றல்
                                                                    ஆவடி , தமிழ்நாடு .





இந்த கவிதையைப் படித்து விட்டு போகிறவரே!
உங்கள் கருத்தைச் சொல்லிவிட்டு போகலாமே!

1 comment:

  1. அருமையாய் மலைபோல் உயர்ந்த பகிர்வு. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete