welcome

நண்பர்களுக்கு ஓர் இனிய வேண்டுகோள்! எனது ஒவ்வொரு படைப்பையும் படித்த பின் உங்களது கருத்துகளை பதிவு செய்ய வேண்டுகிறேன்.

Sunday, July 10, 2011

 உன்னதங்களின் உயர்ந்தவர்

 

 












வாருங்கள் ஒன்றாய் சேருங்கள்
வாழ்த்துங்கள் நம் கர்த்தரை !
கேளுங்கள் தேவனை தேடுங்கள்
தேவனின் அருள் பெற !

ஓடுங்கள், துரிதமாய் ஒளியுங்கள்
உலகப் பாவத்தைக் கண்டு !
ஆடுங்கள் நன்றாய் பாடுங்கள்
ஆண்டவரின் அருளைக் கண்டு !

துக்கப்படுங்கள் , வெட்கப்படுங்கள்
துன்மார்க்கர் செயலைக் கண்டு !
பக்கம் வாருங்கள் பரவசமாகுங்கள்
பரமப் பிதாவைக் கண்டு !

நல்லதை செய்யுங்கள் கெட்டதை தள்ளுங்கள்
உள்ளதை உண்ணுங்கள் இருப்பதை உடுத்துங்கள்
மேய்ப்பரை நாடுங்கள் மேன்மையை காணுங்கள்
உன்னதங்களின் உயர்ந்தவரை உள்ளளவும் போற்றுங்கள் !
             
                                                                                       கவிஞர்
                                                                         
  கவி  தென்றல்
                                                                              ஆவடி , தமிழ்நாடு .




இந்த கவிதையைப் படித்து விட்டு போகிறவரே!
உங்கள் கருத்தைச் சொல்லிவிட்டு போகலாமே!

No comments:

Post a Comment