welcome

நண்பர்களுக்கு ஓர் இனிய வேண்டுகோள்! எனது ஒவ்வொரு படைப்பையும் படித்த பின் உங்களது கருத்துகளை பதிவு செய்ய வேண்டுகிறேன்.

Sunday, July 10, 2011

  நல்ல கிறிஸ்து

 

 












பரிசுத்த தேவனை பாடிடுவோம் !
பரம பிதாவை பாடிடுவோம் !
உன்னதங்களில் உயர்ந்தவரை
ஒர்குர லெழுப்பி பாடிடுவோம் !

குருடரின் கண்களை திறந்தவராம் -உடல்
குறைகளை யெல்லாம் களைந்தவராம் !
பாவ மன்னிப்புக்கு பிறந்தவராம் -நம்
பாவத்திற்காக உயிர் துறந்தவராம் !

வேதப் பாடங்களை படித்திடுவோம் -நாம்
தேவ வாக்கின்படி நடந்திடுவோம் !
பகைவனை நண்பனாய் நினைத்திடுவோம் -உலக
பாவம் போக்க வழி செய்திடுவோம் !

நல்ல கிறிஸ்துவரென பெயரெடுப்போம்!
நாம் கிறிஸ்து வருகைக்கு காத்திருப்போம் !
வருகின்ற ஆண்டவரை வரவேற்போம் -அவரை
வான மண்டலத்தில் துதித்திருபோம் !

                                                                                              கவிஞர்
                   
                                           கவி  தென்றல்
                                                                                    ஆவடி , தமிழ்நாடு .






இந்த கவிதையைப் படித்து விட்டு போகிறவரே!
உங்கள் கருத்தைச் சொல்லிவிட்டு போகலாமே!

No comments:

Post a Comment