welcome

நண்பர்களுக்கு ஓர் இனிய வேண்டுகோள்! எனது ஒவ்வொரு படைப்பையும் படித்த பின் உங்களது கருத்துகளை பதிவு செய்ய வேண்டுகிறேன்.

Sunday, July 10, 2011

   சிறந்த மேய்ப்பர்

 

 














தாயை இழந்த சேயைப் போல
     தவித்து நின்றேனே !
தயவு நிறைந்த ஆண்டவர் என்னை
     தாங்கிக் கொண்டாரே !

பாவம் நிறைந்த எனது உள்ளம்
     பரிசுத்த மானதே !
தாபம் கொண்ட என்னை அவரும்
     தழுவிக் கொண்டாரே !

ஒளியிழந்த எந்தன் வாழ்வில்
     ஒளியாய் வந்தாரே !
வலுவிழந்த எனது ஜீவனுக்கு
     வாழ் வளித்தாரே !

சிதறிப் போன என்னைத் தேடி
     மந்தையில் சேர்த்தாரே !
சிறந்த மேய்ப்பர் இயேசுவே யென
     சிந்தைக் குளிர்ந்தேனே !

                                                           கவிஞர்
                                     கவி  தென்றல்
                                                 ஆவடி , தமிழ்நாடு .



இந்த கவிதையைப் படித்து விட்டு போகிறவரே!
உங்கள் கருத்தைச் சொல்லிவிட்டு போகலாமே!





No comments:

Post a Comment