welcome

நண்பர்களுக்கு ஓர் இனிய வேண்டுகோள்! எனது ஒவ்வொரு படைப்பையும் படித்த பின் உங்களது கருத்துகளை பதிவு செய்ய வேண்டுகிறேன்.

Sunday, July 10, 2011

   வாலிப ஞாயிறு

 

 














வாலிப சகோதரரே வாருங்கள் !
வாலிப சகோதரியே வாருங்கள் !
அகிலமும் படைத்த தேவனை
அனைவரும் போற்றுவோம் வாருங்கள் !

பொய் சொல்லக் கூடாது நீயும் -ஒரு
பொல்லாங்கும்  நினையாதே நீயும் !
அன்புடனே நடந்திடுவாய் நாளும் .
அனைவரையும் ஆட்கொள்வாய் நீயும் !

வாலிப நாளான இன்று -நல்
வாழ்வினை தொடங்கிடுவாய் நன்று !
வேதாகமத்தை கைக் கொண்டு நீயும்
தேவனை ஆட்கொள்வாய் இன்று !

முழங்கால் படியிட்டு நீயும்
முவ்வேளை ஜெபம் செய்வாய் நாளும் !
முவ்வுலக தேவனை நீயும்
முற்றிலும் அறிந்திடுவாய் நாளும் !

                                                             

                                                                      கவிஞர்
                                             கவி  தென்றல்
                                                           ஆவடி , தமிழ்நாடு .







இந்த கவிதையைப் படித்து விட்டு போகிறவரே!
உங்கள் கருத்தைச் சொல்லிவிட்டு போகலாமே!

2 comments:

  1. அருமையான கவிதைப் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. வார்த்தைகள் மிக இயல்பாக அமையப் பெற்றதால்
    படிக்கப் படிக்க சுகமாக இருக்கிறது
    இர்ண்டு மூன்றுமுறை படித்துப் பார்த்தேன் அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete