welcome

நண்பர்களுக்கு ஓர் இனிய வேண்டுகோள்! எனது ஒவ்வொரு படைப்பையும் படித்த பின் உங்களது கருத்துகளை பதிவு செய்ய வேண்டுகிறேன்.

Friday, May 20, 2011


   கரண்டியும்  எலுமிச்சைப் பழமும்
 
 
 











ஆளுக்கொரு கரண்டியிலே
அழகானதொரு எலுமிச்சை !
ஆர்வம் கொண்ட உங்களுக்கு
நாங்கள் தரும் பரீட்சை !

கரண்டியை வாயில் கவ்விக் கொண்டு
கருத்தாய் நீங்கள் நடக்கலாம் !
பழம் நழுவி கீழே விழுந்தால்
பரிசு பெறாமல் போகலாம் !

வேகமாக அடியெடுத்து
விவேகமாய் செல்லலாம் !
வெற்றி இலக்கை சென்றடைந்தால்
பரிசுப் பெற்று செல்லலாம் !

                                                         கவிஞர்
                                  கவி  தென்றல்
                                              ஆவடி , தமிழ்நாடு .



இந்த கவிதையைப் படித்து விட்டு போகிறவரே!
உங்கள் கருத்தைச் சொல்லிவிட்டு போகலாமே!

1 comment:

  1. வேகமாக அடியெடுத்து
    விவேகமாய் செல்லலாம் !//
    வாழ்க்கைத்தத்துவத்தின் ஆதார விவேகம் கற்றுத்தரும் அருமையான பயிற்சி அல்லவா போட்டியின் வடிவில்!
    அற்புதமான கவிதைக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete