welcome

நண்பர்களுக்கு ஓர் இனிய வேண்டுகோள்! எனது ஒவ்வொரு படைப்பையும் படித்த பின் உங்களது கருத்துகளை பதிவு செய்ய வேண்டுகிறேன்.

Friday, May 20, 2011

  காலம் கடந்த யோசனை

தலை முடியில் சாயம் (டை )அடித்திருந்தால் ...
முதுமையை காட்டும்
வெள்ளி முடிகளை மறைத்திருக்கலாம் !
மேக்கப் போட்டிருந்தால் ...
இருண்ட உன் முகத்தை
இளமையாக காட்டியிருக்கலாம் !
நவீன உடைகளை அணிந்திருந்தால் ...
கவர்ச்சியாக இருந்திருக்கலாம் !
வரன் கேட்டு வந்தவர்களில்
ஒருவன்
வரதட்சணையின்றி உன்னை
வாரிக் கொண்டு
போயிருப்பானே ...
காலம் கடந்த யோசனை !
கண்ணீர் சிந்தினாள்
முப்பது வயது கன்னிப் பெண் .

                                                   கவிஞர்
                               கவி  தென்றல்
                                         ஆவடி , தமிழ்நாடு .


இந்த கவிதையைப் படித்து விட்டு போகிறவரே!
உங்கள் கருத்தைச் சொல்லிவிட்டு போகலாமே!

1 comment:

  1. காலம் கடந்த யோசனை !//
    காலம் கடந்தாலும் கரிசனமான யோசனை.

    ReplyDelete