welcome

நண்பர்களுக்கு ஓர் இனிய வேண்டுகோள்! எனது ஒவ்வொரு படைப்பையும் படித்த பின் உங்களது கருத்துகளை பதிவு செய்ய வேண்டுகிறேன்.

Monday, June 6, 2011





 












பந்தயத்தில் கலக்க வா...
பரிசுகளை வெல்லவா...


சின்ன சின்ன மழலைகள்
வண்ண வண்ண உடைகளில்
எண்ண மெல்லாம் நிறைவேற
எழுந்து ஒன்றாய் வாருங்கள்!

ஓடி யாடி விளையாடும்
உங்கள் போன்ற பிள்ளைகள்
ஓட்டப் பந்தயத்தில் ஓடினால்
உயர்ந்த பரிசை வெல்லலாம்!

தத்தித் தத்தி ஓடிவரும்
தவளைப் போல ஓடவே
சிரத்தைக் கொண்டு நீங்களும்
பரிசுப் பெற வாருங்கள்!

பாய்ந்து பாய்ந்து குதித்து
பன்னை வாயால் கடித்து
போட்டியில் நீ வென்றிட
பொலிவுடனே ஓடி வா!

ஓவியப் போட்டியில் நீயும்
ஒய்யார மாய் கலக்கலாம்
ஓகோ வென பாராட்டும்
ஓவியத்தையும் நீ வரையலாம்!

பாடி ஆடி ஓடி வா!
போட்டி இடத்துக்கு பறந்துவா!
பந்தயத்தில் கலக்க வா!
பரிசுகளை வெல்ல வா!


                                                                 கவிஞர்
                                                    கவி  தென்றல்
                                                       ஆவடி, தமிழ் நாடு.


இந்த கவிதையைப் படித்து விட்டு போகிறவரே!
உங்கள் கருத்தைச் சொல்லிவிட்டு போகலாமே!

1 comment:

  1. பந்தயத்தில் கலக்க வா!
    பரிசுகளை வெல்ல வா!//
    தென்றலாய் வருடிய அழைப்பிற்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete