welcome

நண்பர்களுக்கு ஓர் இனிய வேண்டுகோள்! எனது ஒவ்வொரு படைப்பையும் படித்த பின் உங்களது கருத்துகளை பதிவு செய்ய வேண்டுகிறேன்.

Friday, June 10, 2011


      தென்றல்

காண இயலாத காற்றே !
கருணையில் இயற்கையின் ஊற்றே !
உயிரினங்கள் உயிர் வாழ
உறுதுணையாய் இருப்பதும் நீயே !

மேகங்களை குளிர செய்து
மழையைப் பெய்ய வைப்பதும் நீயே !
சாதி மத பேதமின்றி
சகலத்தையும் அரவணைப்பதும் நீயே !

கூலி வேலை செய்வோரின் குழந்தைகளை
தூலியில் தூங்க செய்வதும் நீயே !
மின்சாரம் இல்லா வீடுகளில்
மின் விசிறியாய் சுழல்வதும் நீயே !

பஞ்ச பூதங்களில் உன்னைத்தான்
தஞ்சம் கொள்கிறோம் நாங்கள் !
தென்றலை மிஞ்ச கூடியவர்  யாருண்டு ?
தெரிந்தால் கூறுங்கள் நீங்கள் !

                                                                             கவிஞர்
                                                               கவி  தென்றல்
                                                                   ஆவடி , தமிழ்நாடு .



இந்த கவிதையைப் படித்து விட்டு போகிறவரே!
உங்கள் கருத்தைச் சொல்லிவிட்டு போகலாமே!

2 comments:

  1. கவிதை தென்றலாய் மனதை
    வருடிச் செல்கிறது
    நல்ல படைப்பு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. தென்றலாய் தவழ்ந்த அருமையான கவிதைக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete