welcome

நண்பர்களுக்கு ஓர் இனிய வேண்டுகோள்! எனது ஒவ்வொரு படைப்பையும் படித்த பின் உங்களது கருத்துகளை பதிவு செய்ய வேண்டுகிறேன்.

Monday, June 6, 2011

        நினைவு

நினைவே என்முன் நில்லாதே!-பெண்ணே
நீயும் என்முன் நில்லாதே !
எனது உள்ளம் இங்கில்லை -நீ
ஏன் என என்னை கேளாதே !

அடர்ந்த சோலையின் நடுவினிலே
அவளும் நானும் சென்று வந்தோம் !
இனிமை நிறைந்த அவ்வேளையிலே
இன்பத்தை இருவரும் கண்டு வந்தோம் !

உள்ளம் என்ற உறைவிடத்தில் -அவள்
ஒருத்திக்கு மட்டும் இடமுண்டு !
கள்ளம் நிறைந்த நினைவலையே -உனக்கு
கள்வரிடம் மட்டும் இடமுண்டு !

                                                                                கவிஞர்
                                                                  கவி  தென்றல்
                                                                      ஆவடி ,தமிழ்நாடு .



இந்த கவிதையைப் படித்து விட்டு போகிறவரே!
உங்கள் கருத்தைச் சொல்லிவிட்டு போகலாமே!

1 comment:

  1. உள்ளம் என்ற உறைவிடத்தில் -அவள்
    ஒருத்திக்கு மட்டும் இடமுண்டு !
    கள்ளம் நிறைந்த நினைவலையே -உனக்கு
    கள்வரிடம் மட்டும் இடமுண்டு !//

    இடம் பகிர்ந்தளித்த கவிதைக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete